"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, March 02, 2007

எல்லோரும் நல்லாயிருக்கனும்!?




ஆனந்தன்: "மத்த கட்சி வழி எல்லாம் தப்புன்னா! இந்த நாட்டை உங்க கிட்ட கொடுத்து,நீங்க தான் ராஜா! மந்திரி! நீ தான்அரசியல்வாதி ! நீங்க தான் ஆட்சி செய்யனும்னு வந்தால் என்ன செய்வீங்க!?"

தமிழ்ச்செல்வம் : "நாங்க இன்னும் அரசியல் கட்சி தொடங்கல! தொடங்கின பிறகு கேளு..!!அதுவரைக்கும் காத்திரு!"

ஆனந்தன்: "நிஜமாகவே செங்கோல் கொடுத்து ஆளுன்னு சொன்னால், நீங்க என்ன செய்வீங்க?!"

தமிழ்ச்செல்வம் : "எல்லாத்தையும் மாத்துவோம்!"

ஆனந்தன்: "என்னத்த!!??"

தமிழ்ச்செல்வம் : "முதலில் அரசியலில் யார் வரனும்னு ஒளிவு மறைவில்லாம இருக்கனும்!பணக்காரன் வரக்கூடாது! வெள்ளைக்காரனும், பணக்காரனும் ஆட்சி செய்து ஏழைகள் வாழ்ந்தது போதும்!! "

ஆனந்தன்: "பணக்காரனை வெளியில் துரத்தினால் போதுமா!?"

தமிழ்ச்செல்வம் : "சாதி! கீழ்சாதின்னு தொடாமல் அடிமை மாதிரி இருந்தவங்க இனிமந்திரி சபைக்கு வரனும் !!முதலாளித்துவம் ஒழியனும்! அரசியல்வாதிகள் போலீஸ்காரனை கைத்தடியா நடத்தறது நிறுத்தனும்! ஊழல்!! ஒரு துளியும் கூடாது!! அதிகாரம், ஆட்சி அதிகாரம் என்பது ஆய்தமில்லை!

ஆனந்தன்: "வறுமை ஒழியனும்! இல்லாமை ஒழியனும்! சாப்பாடு இல்லாம யாரும் இருக்கக் கூடாது! எல்லோரும் நல்லா இருக்கணும்!! எல்லோரும் நல்லா இருக்கணும்!! "








புரியாதவர்களுக்கு ஒரு சிறு கதைச் சுருக்கம்:

திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்) இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும்,நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர். எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடிபடுத்திக்கொள்கின்றாரிவரத் தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார். இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும்,ஆன்ந்தும் பகைவர்களாகின்றனர். இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார். இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார். இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்க முடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.

[தொகு]விருதுகள்
1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா)வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ்வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன

படத்தை மீண்டும் பார்க்க விரும்புவர் இங்கே சொடுக்கவும்.

1 comment:

லக்கிலுக் said...

அருமையான பதிவு தோழரே!

அந்தப் படத்தில் சில போராட்டங்களை வேறுவிதமாக சித்தரித்திருந்தார் இயக்குநர். அதுமட்டும் எனக்குப் பிடிக்கவில்லையே தவிர படம் பிரமாதம்!!!