"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, October 31, 2006

உறவுகள்-மறந்தும் மரத்தும் போனவை!



யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாகிவிட்டாதாலோ என்னவோ நாம் நம் அருகில் இருந்த பல உறவுகளை இழந்து விட்டோம்.உறவு என்பது ரத்தசம்பந்தமானவற்றையே பெரும்பாலும் குறிக்கின்றது.
நாம் உறவுகளிடமிருந்து என்ன எதிபார்க்கிறோம்? பண உதவியா? ஆதரவு வார்த்தையா? என்னைக்கேட்டால் இரண்டு கேள்விகளுக்குமே ஆம்! என்று தான் பதிலளிப்பேன்.

ஆனால் உறவுகளுக்குள்ளே கொடுக்கல் வாங்கல் கூடாது ? இருந்தால் உறவு கெட்டுவிடுமே! இது பெரும்பாலானர் கருத்து!
நானும் ஆமோதிக்கிறேன்.ஆனால்,கெட்டு விடாமிலிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மிகக்கடினமான நேரத்திலும் உதவிக் கண்டிப்பாகத் தேவை என்ற வேளையிலும் இக்கோட்பாட்டை எப்படிக் கடைப்பிடிப்பது. அப்போது யார் உறவென்றாலும் உதவி கேட்பது தானே மனிதமனம்.நமக்குத் துன்பத்தில் துணைப்புரிய வேண்டுமென ஏங்கித்தவிக்கிறோமே! ஆனால், நாம் அப்படி யாருக்காகவது செய்திருக்கிறோமா ? என்ற கேள்வியைக் கேட்டு விட்டு ஏங்கினால் நன்றாயிருக்குமல்லவா?

எனவே தாம் வள்ளுவத்தில் கடலைவிட,இவ்வுலகை விட பெரிதென எதிர்பாராது செய்த உதவியைக்குறிக்கிறார்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

இதெல்லாம் நடப்பு உறவுகள்.ஆனால்,இந்தத்தலைமுறை இழந்து வரும் நமது மூத்த உறவுகளாகிய நமது தாத்தா பாட்டி போன்றவர்களின்றி எவ்வளவோ இழக்கப்போகிறது.
அன்பு, அரவணைப்பு, நல்ல கருத்துகள்,கதைகள் என எவ்வளவோ நமக்கு கிடைத்தது.ஆனால் வரும் தலைமுறை எதிர்நோக்கியுள்ள இப்போட்டி உலகில் இதற்கெலாம் நேரம் இருக்குமா?? ஒரு வேளை இந்த வலை உலகம் தான் அவர்களுக்கு பிற்கால வாழ்க்கை என்றாகிவிடுமோ!

இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தபோது, தமிழகத்தில் தமிழ் பேசி வாழும் நமக்கே இவ்வளவு வருத்தெமெனில் கடல் கடந்து வாழும் தமிழர் தம் மனம் என்ன பாடுபடுமென் எண்ணியிருந்தபோது கண்ணில்பட்ட ஒரு ஒளி-ஒலி(video)யை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.(இன்னும் நிறைய பிறகு பேசுவோம்.)


 

















இணைப்பிற்கு இங்கே சுட்டவும்.
I found the video on Youtube (via Google).


Monday, October 30, 2006

ஈ.வெ.ரா. வாரிசுகளும் பின்னே கூட்டணியும்!



தலைவர்களைப்பொருத்தவரை சிந்தனை என்பது இப்போதைக்கு கட்சி 
மற்றும் வாரிசு வளர்ச்சிகளிலேயே இருக்கிறது.

பெரியாரின் கடவுள் கோட்பாடுகளை நான் வழிமொழியவோ ?
முன்மொழியவோ இல்லை மேலும் அவரின் பார்ப்பன சூத்திர
வாதங்களைப்பற்றி அத வதங்கள் மற்றும் வாதங்கள் செய்ய நிறைய
சீடர்கள் உள்ளனர் என்பதும் வலையாளர் அறிந்ததே!

ஆனால்,
வன்முறை தூண்டும் பேச்சுகள் ..நீ என் அன்புத்தம்பி என்று கூறி
தம்பிகளை ஆட்டோவில் அனுப்பும கலை மிகுந்த அய்யாக்களும் அம்மாகளும் நிறைந்த இந்நாட்டினிலே ...தனியாய் நின்று யாரைப்பற்றியும் கவலை படமால குரல் கொடுத்த தலைவனாய்- தொண்டனாய் என்னைப் பெரியார் மிகக்கவர்ந்தார்.

கடவுள் பற்றிய அவர் கருத்துகளே இன்னும் இங்கு விற்று முடியவில்லை.
அது போலவே சாதிகளும் இட ஒதுக்கீடுகளும்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் ஒளவை.

குலம் தாழ்த்தி உயர்த்தி செல்லல் பாவம் என்றார் பாரதியார்.

என்றெலாம் நமது தமிழ் சான்றோர் கூறி பல நூற்றாண்டுகளாகிவிட்டது.

ஆனால் இன்னமும் கட்சிகளின் வேட்பாளர் தேர்தலுக்கான இடஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் மட்டுமே.இதில் அனைத்து முன்னேற்ற கழகங்களும் அடங்கும் (விசயகாந்த் கட்சி உட்பட).

அது சரி ..இவர்களின் வியபார மூலபொருளல்லவா சாதிகள் ..நாம் எப்படி எதிர்பார்க்கலாம் இவர்கள் அதை ஒழித்துக்கட்டுவார்கள் என??



பெரியார் கூறிய பகுத்தறிவு மட்டும் தமிழனுக்கு இருந்திருந்தால கட்சிகளைத்தான் முதலில் அவன் பகுத்தெடுத்திருப்பான் முதலில்.

பாருங்கள் இன்று கூட நாம் சாதிப்பிரச்சனைப் பற்றிய ஒரு தீர்ப்புக்கு காத்திருக்கிறோம்.((http://www.dinamalar.com/2006oct30/court_ind1.asp)





பெரியாரின் சாதி ஏன் ஒழியவில்லை என்ற கருத்து பின்வருமாறு..



சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்;
அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச்
சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது.
எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன்.
இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை
இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை
கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக்
கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும்,
நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.
காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம்
செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை
என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார்.

நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று
நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல்
இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு
சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப்
பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை
ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய
வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும்
என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று
பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம்
வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத்
தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற
வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு
அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து
விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப்
பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த
பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை
ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப்
புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம்
ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது
காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க
விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள்
விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும்
அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை
எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று
இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன்
தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர,
தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு
போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது
ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள்
என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய
ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம்,
"ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால்
கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப்
பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்'
என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும்
கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே
இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.
அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற
முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள்
செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு,
நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே
இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக
"காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச்
சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான்,
"காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி
சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம்.
காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு
மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து
அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி
படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே
என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.
1957)

அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம்.
யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத்
துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும்
பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு
இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில்
கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு
விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே
இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி,
முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன்,
பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில்
ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று
உறுதியாகக் கூறுவேன்.


27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் ஆற்றிய உரை.
"விடுதலை' 5.5.1953.

(நன்றி:கட்டுரை உதவி:http://www.periyarevr.org)
 

Friday, October 27, 2006

நாய் பொழப்பு!!


நாய் பொழப்பாய் இருக்குங்க என்று நாம் அலுத்துக் கொள்வோம்.

நல்ல வேளை நமக்கு நாய் மொழி தெரியாது..??
அதுங்க புலம்பலை கேட்க!!


இது போலத் தான் நமது விருப்பங்களை அடுத்தவர் மீது திணிக்கிறோமோ என்று ஏனோ தோன்றியது நிஜம்..!?

இங்க பாருங்க இதுங்க படும் பாட்டை..?! 











































Thursday, October 26, 2006

இவரல்லவோ தல(லைவர்)!



தன் மக்களுக்கு துன்பம் என்றதும் ஒரு தலீவன் எப்டீ கீனும்ன்னு நம்ம பெரியண்ணன் புஷ் இப்டிக்கா சொல்ரார்..

இதை இப்ப அங்க :” புஷீஷம் ” (எனறு பீலீங்கோட சொல்றாங்களாம்.)

மேலும் நம்ம தலைவர்கள் எப்படி ஆதரவாய் செயல்பட்டார்கள் என வேகமாய் தேடிய போது கிடைத்த படங்கள் இவை.
நம்ம முதல்வர் படத்தைதான் முதலில் தேடினேன்..அது மாதிரி ஏதும் கிடைக்கல.

யாராச்சும் கிடைச்சா அனுப்புங்க...









********






Wednesday, October 25, 2006

வாஞ்சிநாதன்-(குறிப்பு : விஜயகாந்த் படம் பற்றியல்ல)


வெறும் ராட்டையால் மட்டும் பெறப்படவில்லை சுதந்திரம்.

வாஞ்சிநாதன் இவர் வரலாற்று நாயகன். ஆனால், அவரது தீரச் செயலின் கன பரிமாணம் தனித்தன்மை வரலாற்று முக்கியத்துவம் சரியாக உணரப்படவில்லை.


எப்படியாவது இவரின் ஒரு புகைப்படமாவது கிட்டுமென மெனக்கெட்டும் கிடைக்கவில்லை.
மிகவும் வருத்தமாக இருந்தது.(என் தேடலும் முழுமையாய் நடக்கவில்லை..என் செய்வது கூகுலின் தேடல் தான் இன்று வலைப்பதிவாளர் எல்லையாயிற்றே!!)

 மேலும்
நாம் மறந்து போன மகத்தானவர்களில் எனக்கு முதன்மையாய் தோன்றியது இவர் பெயர் தான். ஒரு தமிழ் படத்தில் வந்த காட்சி(படத்தின் பெயர் நினைவில் இல்லை) எனது மனதில் இன்றும் இருக்கிறது. ஆஷ் துரை என்ற பரங்கியனை சுட்டி வீழ்த்தி தன்னையும் மாய்த்துக்கொள்ளும் அந்த வீரமிகு காட்சி ..நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறது.

இவ்வாறெல்லாம் அந்நியரை வெளியேற்றிய முதன்மைக்கட்சியாம் காங்கிரஸ் தான் இன்று மீண்டும் ஒரு அடிமைத்தனத்தை வளர்த்தி வருகிறது outsourcing என்ற பெயரால்..

இதைப்படிப்பவர்கள் படித்தவர்கள் படிக்காதவரிடம் காட்டுங்கள்..இன்னும் இந்த புண்ணிய பூமியில் மறக்கப்பட்ட மஹாத்மாக்கள் நிறைய உண்டு என்று.


அவர் பற்றிய ஒரு சிறியக் குறிபபுத் தொகுதி-(ஒரு முறையாவது படியுங்களேன்)

1. இவர்தான் ஆங்கிலேயரிடம் கணக்குத் தீர்த்தவர்



ஆங்கிலேயர்கள் நாடு விட்டு நாடு வந்து இந்த மண்ணை ஆக்கிரமித்து இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களையே அடிமைப் படுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் தங்களை எதிர்த்துப் போராடிய புலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோரை இந்த மண்ணிலேயே தூக்கிலிட்டுக் கொன்றவர்கள். கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்த்து தரைமட்டம் ஆக்கியதுடன் அந்த மண்ணில் தங்களுக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அந்த ஊரையே ஏர் கொண்டு உழுது விட்டார்கள். வேலூர்ப் புரட்சியின் முடிவில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின் அவர்களது வாரிசுகள் மீண்டும் தங்களுக்கு எதிராகத் தலை எடுத்து விடக் கூடாது என்பதற்காக இளம் சிறார்களாயிருந்த அவர்களது மகன்களையும் மருதுபாண்டி யருக்குத் துணை நின்ற புரட்சிக் காரர்களையும் மலேயாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள சிறையில் அடைத்தவர்கள். சிறையில் அடைக்கப்பட்ட தமிழர்களின் உடல்களைச் சுற்றி இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டு அவர்கள் நடக்கும் பொழுது "கிளிங்' "கிளிங்' என்று ஓசை எழுப்பியதால், தமிழர்களுக்கு ""கிளிங்கர்கள் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. பிற்காலத்தில் ஆஷ்துரை கூடத் தன் பங்கிற்குத் தூத்துக்குடியில் ஊர்வலமாக வந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் சிலரைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். இத்தகைய கொடுமைக்கார ஆங்கிலேயரை எதிர்த்துப் பிற்காலத்தில் தமிழகத்தில் தமிழர்கள் கொடிபிடித்திருக் கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்களே தவிர, யாரும் ஆயுதம் ஏந்தவில்லை 1806 இல் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர்ப் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து அந்தக் குறையைப் போக்கி அவர்களிடம் கணக்குத் தீர்த்தவர் வாஞ்சிநாதன் தான்.



2. இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப் பட்டவர்.



இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்து தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பாதிப்புகள் எல்லாம் தமிழக எல்லையைத் தாண்டவில்லை. ஆனால், வாஞ்சிநாதன் நிகழ்த்திய தீரச் செயல்தான் இந்திய எல்லையையும் தாண்டி நம்மைப் பாதித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது. ஆங்கிலேயரிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின் தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன் 1911, ஜுன் 17 இல் ஆங்கிலேயப் பேரரசின் பிரதிநிதியான கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டது பற்றி 1911 ஜுன் 19 ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 3. இவர் தான் வெளிநாட்டுப் பத்திரிக்கையின் தலையங்கத்தில் புகழப் பட்டவர். இந்திய விடுதலையில் மிகவும் அக்கறை கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த மேடம் காமா அவர்கள் அப்போது பாரீஸ் நகரிலிருந்து வெளியான தனது ""வந்தே மாதரம் பத்திரிக்கையின் தலையங்கத்தில் வாஞ்சிநாதன் தீரச் செயலைப் புகழ்ந்து இவ்வாறு எழுதினார். ""திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வர வேண்டியிருக்கும்.



வாஞ்சிநாதனும் வ.உ.சியும்



வ.உ.சி. மென்மையான மேன்மையான பண்புக்குச் சொந்தக்காரர். ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் விளைவிக்காதவர். இத்தகைய வ.உ.சியே கூட, சிறையிலிருந்த தன்னிடம் சிறைக்காவலன் கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற செய்தியைக் கூறியதும், ஆஷ்துரை கொல்லப் பட்டதற்காகக் கொஞ்சமும் இரக்கப்பட வில்லை. மாறாக, ""நல்ல செய்தியைச் சொன்னாய் நீ நலம் பெறுவாய் என்று அவனை வாழ்த்தினார். அத்துடன் அவனிடம் தான் சிறைவாசம் அனுபவிப்பதற்கும், தனது கப்பல் கம்பெனி நசிந்து போனதற்கும் இந்த ஆஷ்துரைதான் காரணம் என்றும் விளக்கினார். ஆங்கிலேயர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் சிறைவாசம் என்பது கடுமையானது & கொடுமையானது. இந்தச் சூழ்நிலையில், ""இங்கிலாந்து சக்கர வர்த்தியின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தண்டனைக் குறைப்பு இந்த ஆண்டு வ.உ.சிக்கு கிடையாது என்று அந்த சிறைக் காவலன் கூறிய போது ""இப்பொழுது மட்டுமல்ல, இனி எப் பொழுதுமே எனக்கு விடுதலை இல்லா விட்டாலும் கூடப் பரவாயில்லை என்று அலட்சியமாக அவர் பதில் கூறினார் என்றால் ஆஷ்துரை கொல்லப்பட்டது அவருக்கு எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். முத்துராமலிங்கத் தேவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியாதை. சூரரைப் போற்று என்பார் பாரதி. யாருக்கும் தலைவணங்காத தன்மானச் சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன் அப்போது சென்னையில் வசித்து வந்த வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் அம்மையாரைச் சந்தித்து அவருடைய காலில் விழுந்து வணங்கி அவருக்கு ஒரு புடவை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இது அவர் வாஞ்சிநாதனிடம் கொண்டிருந்த மரியா தைக்கு ஒரு எடுத்துக்காட்டு.



நன்றி:
மாலை மலர் கட்டுரை.

 

Friday, October 13, 2006

இது கூட விளம்பரம் தான்.!




sep-11 அதாவது 11/9 யாராலும் மறக்க இயலாது.சொல்லப்போனால் பாரதி பிறந்த தினம் அதுவென்பதே நம் மாதர் சங்கங்களுக்கு மறக்கச்செய்த ஒரு கர்ண கொடுரமான நாள்.

ஒரு புகைப்படம் தேடிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்ட செய்தி மனதை என்னவோ செய்தது.


அந்த 1979-ல் வந்த செய்தித்தாளின் ஆங்கிலாக்கம்.

VIA PIA
New York via Pakistan International. One of the companies offering scheduled flights to New York. Departure from Orly Sud, offering best flights to the cities in provinces. A new proof of PIA’s efficacy.
PIA is an international company expanding business successfully: 3 000 000 passengers this year, a departure every 6 minutes.
Success thoroughly built on customers’ satisfaction. For having an excellent flight to New York or 60 other metropolises in the world travel via PIA.

பாகிஸ்தான் வழியாக நீயூயார்க் செல்லும் விமான விளம்பரம்.


ஒத்துப்போகும் உண்மை:

1979 -ம் ஆண்டு சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க திருவாளர் அண்ணன் மாண்புமிகு பின்லேடன்( ஹி ஹீ என்ன பண்றது ஒரு ஸேப்டிக்குத்தான்) அவர்கள் சீர்மிகு தலைமையில் ஜிகாத் அதாவது புனிதப்போர் துவங்கப்பட்டது.


The 1979 Soviet invasion of Afghanistan galvanized bin Laden. He supported the Afghan resistance, which became a jihad, or holy war. Ironically, the U.S. became a major supporter of the Afghan resistance, or mujahideen, working with Saudi Arabia and Pakistan to set up Islamic schools in Pakistan for Afghan refugees. These schools later evolved into virtual training centers for Islamic radicals.

Source: FBI



ஒரு வேளை இந்த செய்தித்தாள் பார்த்துத்தான் பின்லேடன் அவர்கள் திட்டமிட்டு வளர்த்த கடா மீது பாய்ந்தாரா?
தெரியவில்லை.


தேர்தல் போட்டியில்-மக்கள் மனதில் யாரு?அவங்களுகென்ன பேரு?









இன்று இங்கு (தமிழகத்தில்)நடைபெற்று வரும் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் கலைஞர் அவர்களின் கூட்டணி ஆட்சியின் தராசாய் இருக்குமென்றால் அது மிகையாகது.

வெளியேறு ஓட்டுக்கணிப்பு(exit pool) நடத்திப் பார்ப்போம் என்ற விழைதலால் இந்தப் பதிவு.
உங்கள் ஓட்டு ரகசியமாய் காக்கப்படும். அதாவது சிலர் அனானிக்களைப் பிடிக்கிறேன் பேர்வழி என நிதானமாய் கருத்துக்களைக் கூறுபவர்கள் வயிற்றிலும் புளி கரைக்க உதவியாய் இருந்தனர்.அது போன்ற எந்த ஆராய்ச்சியும் நடைபெறாது என உறுதி கூறுகிறேன்.

இவனுக்கு என்ன அக்கறை எங்கள் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்களே...!



நானும் இன்று ஓட்டளிக்கச்செல்லவில்லை.(இதுவரை) ..
நமது சனநாயகத்தின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
என்னவோ போங்க..
ஆனால், வலைப்பதிவாளர் பெரும்பாலும் (அதுவும் அரசியல் மட்டுமே நிறையப்பேசும் ) ஓட்டளித்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.(பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழி வேறு இப்ப ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.)

எனது நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் வசிக்கும் நமது சகோதரர்கள் அவர்களின் ஊராட்சி யார் கையில் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள் என்பது பொதுவாய் அனைவருக்கும் தெரிந்தால் நன்றாய் இருக்கும் அல்லவா?

எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் அணிகளை மட்டுமே நாம் கணிக்கப்போகிறோம்.


என்னாலியன்ற சில குறிப்புகள்.


1.தி.மு.க. மற்றும் கூட்டணி.


குறிப்பு: மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் உள்ளனர்.
சாதனை: இலவச அறிவிப்புகள்
பலம் : அநேகமாக அனைத்துக்கட்சிக்கூட்டணி மற்றும் கலைஞர்.
பலவீனம்: மிக குறுகிய காலத்தில் அடுத்த சோதனை மற்றும் எதிரணியினரின் வாரிசு அரசியல் எதிர்ப்பு.
வேதனை: கூட்டணிக்குழப்பங்கள்
கோஷம்: மத்தியில் நாங்கள்,மாநிலத்திலும் நாங்கள் ஆகவே ஊராட்சியிலும் நாங்கள் இருந்தால் மட்டுமே அனைத்து உதவிகளும் மக்களுக்கு வரும்.

2.அ.தி.மு.க. மற்றும் கூட்டணி.


குறிப்பு: முதன் முறையாக அதிக பலம் வாய்ந்த ஒரு தனி எதிர்க்கட்சி.
சாதனை: வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதை தெளிவாய் எடுத்து வைத்தது.
பலம் : நம்பிக்கை வாய்ந்த ஜெ.தலைமை மற்றும் வை.கோ. வின் மேடை முழக்கங்கள்.
பலவீனம்: நம்பிக்கை வாய்ந்தவர் அருகில் இல்லாத தலைமை.
வேதனை: அம்மா என்றவர்கள் இவ்வளவு சீக்கிரம் அய்யா என்றது.
கோஷம்: மத்தியில்,மாநிலத்திலும் அவர்கள் செய்தவை போதாதா? மற்றும் விலைவாசி உயர்வு வாதங்கள்.


3 . தே.மு.தி.க. . மற்றும் கூட்டணி.


குறிப்பு: முதன் முறையாக அதிக மக்கள் ஆதரவு பெற்ற தனிக்கட்சி.
சாதனை: ஒரு எம்.எல்.ஏ. மற்றும் பா.மா.கா. கோட்டை விருத்தாசலதைப் பிடித்தது.
பலம் : மேடை முழக்கங்கள் மற்றும் விஜயகாந்த். மற்றும் மக்களிடம் பரவலாய் உள்ள மாற்றுகட்சி மனோபாவம்.
பலவீனம்: நிரந்தர சின்னம் இல்லாதது அப்பறம் வேறு என்ன பணம் தான்.
வேதனை: மீடியாவின் சரியான ஆதரவு இல்லாதது.
கோஷம்: இத்தனை வருடம் அவர்கள் செய்தவை போதாதா? மற்றும் ஊழல் பற்றிய வாதங்கள்.
*********


முடிவுகள் பொதுவானவை .அனைவரும் உடனுக்குடன் பார்க்கலாம்.ஆனால் மற்றவரின் ஆதரவைப் பார்க்கும் முன் உங்கள் மனதில் இருக்கும் அந்த பர்சனாலிட்டிக்கு ஓட்டளித்தபின் முடிவுகளைப் பாருங்களேன்.இது பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதோ இங்கே ஓட்டெடுப்பு நடக்கிறது.















மக்கள் மனதில் யாரு?



அவங்களுகென்ன பேரு?






தி.மு.க. மற்றும் கூட்டணி.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி.
தே.மு.தி.க. . மற்றும் கூட்டணி.
இவை ஏதும் வேண்டாம்?
தேர்தலில் நம்பிக்கை இல்லை?

 Current Results