"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, November 24, 2006

கண்ணாமூச்சி ரே! ரே !?

ஒண்ணுமில்லைங்க. ஒரு சிறு விளையாட்டுப் போட்டிங்க!

உங்க மனசில் உங்களுக்குப் பிடிச்சவங்களை நினைச்சுக்கிட்டு '+' குறியீட்டை உற்றுப் பாருங்க!

அப்புறம், உங்களைச் சுற்றி என்ன நடக்கெதென்பதே தெரியாம போயிடும். .





ஹி..ஹி...சும்மா ஒரு தமாசுக்குத் தாங்க.
***

Thursday, November 23, 2006

விளம்பர இடைவேளை ?!




நமது வலைப்பதிவாளர் எல்லோரும் நிறைய "எப்படி" எழுதி களைச்சுப் போனதினால் இந்த சிறு விளம்பர இடைவேளை.



















Wednesday, November 22, 2006

ஆய்த எழுத்து ?






உருமாறுவது மனித உருவம் மட்டுமல்ல ! மொழிகளின் உருக்களும் தான் !!

காலப்போக்கில் இலக்கணம் மாறும் என்பதும் உண்மை.

நான் முயன்ற வரை இந்த யூனிக்கோடு முறையில் ஆய்த எழுத்தை எப்படி உருவாக்குவது எனத் தெரியவில்லை.

படங்களைப் பாருங்களேன். எவ்வாறெல்லாம் தமிழ் உருமாறியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.



வலையுலக நண்பர்களே ! நாம் கொண்டாடும் மொழியே உருமாறக் கூடியது. 60 வயதிற்கு மேல் ஆனவர்களின் எழுதச் சொன்னால், அதில் ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு என்று நம்மில் பெரும்பாலோனவர்கள் 
மறந்து போனதைக் காணாலாம்.

ஆகவே, பெரும்பாலோனர் மறந்த ஆய்த எழுத்தை மட்டும் ஏன் வலைப்பதிவாளர்கள் எழுத்தில் பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.

ஒரு நல்ல ஊடகத்தை, இந்த வியாபார காந்தங்கள் ஊடக வியாபரத்திற்கும், தனிக்குழும மேன்பாட்டிற்கும் பயன்படுத்துவதைப் பார்த்தால் மனசை நெருடுகிறது. பொன்னான நேரத்தை வீணடிக்கிறோமோ என சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.

நான் வலையில் பதியத் துவங்கி சில மாதங்களே ஆகிறது. இந்த சில வாரங்களாக ஒருவரையொருவர் காழ்ப்புணார்ச்சியுடன் அடித்துக்  கொண்டும் , கூட்டணியமைத்து பின்னூட்டப்போர் நிகழ்த்துவதைக் காணும் போது வேதனை தான் வருகிறது.

யாரையும் குறிப்பாய் கூற விரும்பவில்லை.
யாரோ ஒரு பதிவில் சொல்லியது போல், அப்படி நாம் எழுதித் தான் ஆக வேண்டுமா!? என்று கூட தோன்றுகிறது.



விடைபெற்றுச் செல்லாமென்றால் வழியனுப்ப யாருமில்லை!!

சரி தான் . போதுமென்று நினைக்கிறேன். பின்பு என்னையும் அரசியலுக்கு இழுப்பார்கள்.

ஆகவே! புலவர்களுள் சர்ச்சை தேவைதான்! ஆனால், அது சண்டையாக மாறிவிடக் கூடாது. எனவே! சாந்தமாக உரையாடுங்கள். ( எழுத்தாடுங்கள் !? )

வாழ்க ! வளமுடன்!

Tuesday, November 21, 2006

சுகமோ சுமைகள்?


இது தவறாயிருந்தாலும் வாழத் தானே வருத்திக்கொள்கிறார்கள்.


யார் மிகச் சிறப்பான சுமைதாங்கி ? சொல்லுங்களேன ??.













 

Friday, November 17, 2006

தேர்தலுக்கு தேர்தல் ?




அதிரடி அறிக்கைகள் மற்றும் பேச்சுகளுக்குப் பேர் போன 
பா.மா.க. ஒரு அருமையான விசயத்தைத் துவக்கி வைத்துள்ளது.

அது எம்.பி., எம்.எல்.ஏ, தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறை பாமகவில் அறிமுகம் என்பதே.

இந்தியாவில் முதன்முறையாக, பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் புதிய முறையை பாமக நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமகவின் மாநில பயிலரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

இங்கு இக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தொடர்பான பயிற்சிகள் சில ஆண்டுகளாக நடை பெறுகிறது. பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் நிர்வாகிகளின் தலைமைப் பண்பை அதிகரிக்கவும், அவர்களின் தனித்திறனை மேம்படுத்தவும் புதிய முறைகளை ராமதாஸ் புகுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆய்வு நடத்தும் கூட்டமும், அரசியல் பயிற்சி வகுப்புகளும் தைலாபுரம் பயிலரங்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில்பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இது முடிந்ததும், இவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 30 நிமிடம் நடந்த இத்தேர்விற்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்தார். இக்கட்சியின் எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும், பேராசிரியர் சிலர் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் அளித்தனர். (தேர்வு முடிவுகள் தெரியவில்லை.)

இதுபோன்ற தேர்வு, அரசியல் பயிற்சி பெறுகின்ற பாமகவினர் ஒவ்வொருவருக்கும் நடத்தி மதிப்பெண் வழக்கப்படும் என்றும், இந்தியாவில் இதுவரை எந்தக் கட்சியும் தனது கட்சியினருக்கு இதுபோன்ற பயிற்சியும், தேர்வும் நடத்தியதில்லை என்றார் ராமதாஸ். பாமகவைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கும், 5 ஆயிரம் ஆண்களுக்கு கட்சி தொடர்பானபயிற்சிகள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு கட்சிகளில் இவ்வளவு பேருக்கு பயிற்சிகள் இதுவரை அளிக்கப்பட்டதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.




கண்ணாடி முன் நிற்கும் பயிற்சி: பாமகவினர் காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொள்ள வேண்டிய பயிற்சியைப் பற்றி ராமதாஸ் விரிவாக விளக்கினார். கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தவாறு, நான் தன்னம்பிக்கை மிக்கவன், சக்திமிக்கவன், நான் சாதனையாளன், என்னால் முடியும், வெற்றி நிச்சயம் என்று கையை உயர்த்தியபடி கூற வேண்டும். இப்படிச் செய்வதால், உற்சாகத்தோடு கட்சிப் பணியாற்ற முடியும் என்றார் ராமதாஸ்.


இது போன்ற பாசறைகள் ரத்ததின் ரத்ததங்களுக்கும் , உடன் பிறப்புகளுக்கும் பழகிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், முதன்முறையாக ஒரு மதிப்பூட்டு முறையை அறிமுகப்படுத்தி நல்ல துவக்கமாக மாற்றியிருக்கிறார் ராமதாஸ் என்றால் அது மிகையல்ல.

அதே சமயம் எவ்வளவோ நல்ல கெட்ட விவாதங்கள் சூடாய் இருக்கும் போதும் இது போன்றவற்றைச் செய்வது என்பது வாழ்த்துக்கு உரியது.

இனி ஒரு புரட்சி போல் ஏதேனும் நடக்கும் வரை ,

மக்களுக்கு இவர்கள்  அல்லது அவர்கள் என்றே choose the best இருக்கும் வரை,

நல்லவரா தெரியாது !ஆனால் ரொம்ப மோசமான ஆள் எல்லாம் கிடையாது!  என்ற ஆதங்கத்துடன் நாம் ஓட்டுகள் அளிக்கும் வரை,

என்ன நடந்தாலும் கவலையில்லை !? எனக்குத் தேவை 800 சதுர அடி, ஒரு சிறிய கார், என் குழந்தைக்கு கான்வென்ட் , ஐந்து இலக்கச்சம்பளம் என்ற ஒரே கொள்கையுடன் மட்டுமே வாழ்ந்து வரும் சமுதாயம் இருக்கும் வரை,

எப்படியாவது ஒரு புதுப்பதிவும் 10 பின்னூட்டமும் என்ற என்போன்ற வலைபதிவாளார்கள் இருக்கும் வரை.... :)

நடக்கட்டுமே இது போன்ற விசயங்கள் ?!

நம்புவோம் ! நல்லது நடக்குமென ?!


கொசுறு :
கீழ்க்கண்ட கார்டூனில் இருக்கின்ற மாதிரி அழ கத்துத் தரமாட்டார்கள் என நம்புவோம்.


Thursday, November 16, 2006

பணம் பத்தும் செய்யுமா?


சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் ரியல்-எஸ்டேட் எனப்படும் வர்த்தக விலையேற்றம் மற்றும் பிரச்சினைகளைப் பார்த்தேன்.அந்த வியாபரத்தின் மறுப்பக்கங்களை அப்பதிவு விரிவாக ஆராய்ந்திருந்தது.

திரிசங்கு சொர்க்கம் என்பார்கள். மேலேயும் போகமுடியாமல்,கீழேயும் போக முடியாமல் மாட்டிக்கொண்டுத்தவிக்கும் நிலை என்பதற்கு உதாரண
வார்த்தையாக திரிசங்கு சொர்க்கம் சொல்லப்படுகிறது. இது தான் இன்றைய கார்பரேட் உலகுப் பணியாளாரின் நிலைமை.

அரிஸ்டோகிராட் சொஸைடி என்ற ஒரு மேல்த்தட்டு வர்க்கம் எப்பொழுதும்
அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு சிருங்காரவாழ்க்கை இன்று நடுத்தர வர்க்கத்தை எட்டியுள்ளது. நம் I.T. என்ற மென்/வன் பொருள் வர்த்தகம் மற்றும் outsourcing என்ற பிறநாட்டு வணிகங்களின் பின்னக அலுவலக வேலைகளின் அமைப்புகள் எனப் பணத்தை அள்ளி வீசும் ஒரு பொருளாதார சூழல் நிலவுகிறது.

இவர்களுக்கு இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் கவலையில்லை.

ஓட்டுப்போட்டால் தானே அந்தக்கவலை. ஆனால், இவர்களுக்கு வாக்காளர் அட்டை மிகத்தேவை,பின்னே அதுதானே கடன் வாங்கத்தேவைப்படுகிறது. சரி! இந்தச் சிருங்கார ஆட்டங்கள் எத்தனை நாளைக்கு ?? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. அனைவருக்குமே, 2000 ஆண்டு நடந்த ஆள்வெளிக்கொணர்வு நிகழ்வுகள் மறக்காமல் இல்லை.

ஆனால், இந்த அனைவருக்குமே என்பதில் 5வருடம் இந்தத்துறையில் குப்பைக்கொட்டியவருக்கே பொருந்தும். முன் சொன்ன இந்தச் சிருங்கார ஆட்டங்கள் பாதிக்காத, பெரும்பாலும் இந்த மத்திம வயது(30+) கனவான்கள், அவர்தம் தந்தை வாழ்நாளில் பார்க்காத சம்பளம் வாங்கியதே பெரும் சாதனை தான் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில்,சிலிக்கன் வேலி என்ற பள்ளத்தாக்கு தந்த அருமையான வாழ்க்கையை பெரும்பாலும் அழகாக ( இல்லையெனில் அப்படிநினைத்துக்கொண்டு) திட்டமிட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்தத் திட்டமிடல் பழகாத 5இலக்க மாதச்சம்பளங்கள் பெரும் இளம்வயதினரை(20+) நான் மிக வியப்புடன் பார்த்திருக்கிறேன்.

இவர்களது வாழ்க்கை திட்டமிடப்பட்டதா! இவர்களால் இந்த வீழ்ச்சிப்பார்க்காத வளர்ச்சி நமது பங்கு வர்த்தகம் போல் ஆபத்தானதா? என என்ணி குழம்பியிருக்கிறேன். தோல்விகள் காணாத வாழ்வு சரியா? என்ற ஒரு கேள்வி நெடுநாளாக என் மனதில் உண்டு. இவர்கள் ஒரு 5 மாதம் சம்பளம் இல்லை என்றால் சேமிப்பைக்கொண்டே வாழ்ந்துவிடுவார்களா!

இப்படி என்னை எண்ண வைத்தது நேற்று வந்த ஒரு மின்கடிதம் அதில்
ஆராயப்பட்ட ரியல் எஸ்டேட் வர்த்தகம் பற்றிய கருத்துகளில் எத்தனை சதவீதம் உண்மை என எண்ணால் கூற இயலவில்லை.ஆனால், ஒரு எச்சரிக்கை மணி மட்டும்மனதில் அடித்தது.

1.ஷேர் மார்க்கெட் எனும் பங்கு வர்த்தகம்

2.மியூச்சுவல் ப்ண்ட் (அனுமதிக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை என்ற வார்த்தை சரியாயிருக்குமா!)

3.இன்ஸுரண்ஸ் எனும் காப்பீடு சம்பந்தப்பட்ட முதலீடுகள்

4.பேங்க் டிபாஸிட்-தனிப்பட்ட வங்கி பணமுதலீடுகள்

5.ரியல் எஸ்டேட் - வீடு மற்றும் நிலங்கள் வாங்கும்-விற்கும் வர்த்தகம்.

மற்றும் டிஸ்கோத்தே முதல் ரிஸார்ட்ஸ் வரை பொழுதுபோக்கு அம்சங்கள்.

மேற்கூறியவையாவது வியாபரம் எனக்கூறி நேரிடையாக பணம் பறிக்கின்றன. ஆனால், மேற்ச்சொன்ன இந்த வகையானவர்களை நம்பி புதுசா ஒரு மருத்ததுறையே உருவாகியுள்ளது. அதற்குப் பெயர் stress management & Age managment. அதாவது மன அழுத்த மேலாண்மை மற்றும் வயதாவதினை மேலாட்சி செய்தல் (இது பொருத்தமாத்தான் இருக்கு).

இந்த மருத்துவ கும்பல் அருமையாக பணம் கொழிக்கிறது. இறப்போர் எண்ணிக்கை குறைய , பிறப்போர் எண்ணிக்கை கூட உலகம் ஒரு சமநிலை இழந்து தடுமாறும் இந்த வேளையில் இது போன்றோர் கூறும் வார்த்தைகள் அப்படியே நம்பவைக்கிறது. அதுவும் இந்த மெடிக்ளைம் எனப்படும் மருத்தக்காப்பீடு முறை வந்த பின்பு இவர்கள் போடும் ஆட்டம் தாங்கமுடியலை.

கடந்த மாதம் என் நண்பர் ஒருவர் என்னிடம் " வயிறு வீங்கனாப்போல்
ஒரு இறுக்கமாயிறுக்கு ?! என்னாவாயிருக்கும்" என்றார்.

"கங்கிராட்ஸ்! நீங்க அப்பாவாகப்போறீங்க! " என்றெலாம் கடிக்காமல்
"ஜோடா வாங்கி குடீயப்பு! ஏப்பம் விட்டா அம்புட்டுத்தேன்!? " என்ற பழகு
வைத்தியம் சொல்லாமல், " மச்சான்! குவாட்டர் ஓல்ட் மங்க் எடுத்துக்கோ! அதில் கொஞ்சம் பெப்பர் போட்டுக்கோ! லட்டு தான் சைட்-டிஷ்! அப்புறம் குடிச்சுட்டு குப்புறக்கா படுத்து தூங்கு! அப்பாலிக்கா பாரும்மா! " என்ற நண்ப வைத்தியம் கூறாமல்,"கொஞ்சம் திப்பிலிகாய் வற்றலும்,சித்தரத்தை ஒரு கையளவு இவற்றை தேன் சேர்த்து சாப்பிட்டால்,வருடத்தின் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இன்பமாய் போகும்" என்றெல்லாம் சொல்லாமல் ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்குப்போயிருந்தோம்.

அந்த மருத்தவர் முதல்பார்வையிலேயே கண்டுபிடித்து விட்டார்.இது I.T. கும்பல் என்று. அவரது அடுத்த கேள்வி." மெடிக்ளய்ம்தானே? எய்டு கார்டு இருக்காப்பா?"நண்பர் தலையசைத்த விநாடி பிரிஸ்க்ரிப்ஸன் பேடைத் திறந்து,

"சொல்லுங்க!" என்றார்.

"வயறு உப்புசமா இருக்கிறது" என்றவுடன் ஒரு நாலு வரி எழுதினார்.
"அப்புறம் ? "

" சரியா காலைக்கடன்போக முடியல இரண்டு நாளா"

மேலும் ஒரு வரி கூடியது.

"அவ்வளவுதானே" என்றார் மளிகைக்கடைக்காரர் போல்.

நண்பர் குழப்பத்துடன் இருக்க புரியாத மருத்துவ சங்கேத வார்த்தைகளில்
அருகிலிருந்த நர்ஸிடம் பேசி,

"இந்தாங்க ! இவங்களோட போங்க...! ப்ரெய்ன் ஸ்கேன்,மோஷன்,யூரின்,ப்ளட்
டெஸ்ட்ஸ் அப்புறம் இ.ஸி.ஜி." எல்லாம் எடுத்திடுங்க!? ரிஸல்ட் வந்தவுடன் மேற்க்கொண்டு டிஸ்கஸ் பண்ணுவோம் " என்றபடி நண்பரைப் பார்த்து

"கார்டு கொடுங்க சார்?" என்றார்.

நண்பர் அந்த குளிர்சாதன அறையில் வேர்த்து வயிறுப்பிரச்சனை சரியாகி "சார்! எங்க HR departmentக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்திடரேன் " என்று சாக்கு சொல்லிவிட்டு,ஏற்கனவே, அட்வான்ஸாக(?!) 1000 ரூபாய் கட்டியிருந்த படியால், சொல்லிக்காமல் அந்த மருத்துவமனை விட்டு வெளியேறினோம்.

அவருக்கு ஒரு பாட்டி வைத்தியத்தால் அந்தப்பிரச்ச்னை சரியாகிவிட்டது என்றாலும்,ஒருவருக்கு வசதி இருந்தால் இன்ஸுரன்ஸ் போன்றவை இருந்தால் கொள்ளையடிக்கும் கும்பல் எப்படியெலாம் செய்கிறது பார்த்தீர்களா?

கடைசியாக கருத்துக்கூறியாக வேண்டுமே! என்னா சொல்றது !
ஆகவே! பணம் பத்தும் செய்யும்! என் இனிய நண்பர்களே! பணம் மிக முக்கியம் தான். அதைவிட முக்கியம் அதனை எப்படி பாதுகாகிறது என்பது தான்.
நியாயமான முதலீடுகளைச்செய்யுங்கள்.

வளர்ச்சி என்றபெயரில் காட்டப்படும் பங்கு வர்த்தனை அட்டவணைகளையும், அறிவுரைகளையும் நிதானமாக கவனித்து ஒரு சிறு பங்கை முதலீடு செய்யுங்கள். இங்கே தான் ஏர்போர்ட் வரப்போகிறது என யாராவது மெரினா பீச்சை கூட உங்களிடம் விற்று விடுவார்கள்.

அதுவும் ஒரு கும்பல் இருக்குங்க! " நாந்தான் அப்பவே சொன்னேனில்ல!
" என்பார்கள் எல்லாம் கைமீறிப்போனபின்பு.

அப்பாடி, ஒரு வழியாக மெஸேஜ் சொல்லியாச்சு!

ஆனால், நான் உங்களிடம் சொன்னது உங்களுக்கு சிரிப்பு
வரவழைக்கச் சொன்னது இல்லை!

உங்கள் வாழ்க்கை பார்த்து யாரும் சிரித்து விடாமல் இருக்க!


*****
பின் குறிப்பு :
இங்கு நான் முன் சொன்ன மின்கடிதத்தினை அப்படியே வெட்டி ஒட்டியுள்ளேன். மொழிபெயர்க்க தேவையில்லை எனக்கருதிகிறேன்.
படிப்பீர்கள் என நம்புகிறேன்.
Hi,
(below email "Save the IT People from Debts" was wonderful and we should go through it and also forward to all our friends)
Real Estate price hike is known open robbery from IT guys by brokers / whoever it is and it's not only Flats / Real Estate, IT guys undergo open robbery from all rich shop owners / a person who wanted to become rich as fast as possible...
The salary whatever we get, it's our hard-earned money, most of the times sitting in the night, away from family functions, friends, etc...but all our money or most of the money are going to someone who just takes advantage of our stressful life (both mentally and physically) and our new western life style.
I do not find anything wrong in having a US / UK life style, but many open thieves (starting from Ministers to our local Restaurant owner) just swindling all our "legal money" and as we do not have any other choice becoming poor / debtor day by day.
Well most of the price hikes are just unbelievable and there is absolutely no justification (few examples given below).
Chicken Biriyani (Karaikudi 3 weeks back) - Rs. 65
Today (since last 2 weeks) same Karaikudi Chicken Biriyani (believe me, there is absolutely no change) - Rs. 78, there is no justification for such a big increase.
Pop Corn (Sathyam Complex) previously (month and half back) - Rs. 20
Today (almost the same quantity) - Rs. 30 (again, i do not find any justification)
Corn in Garuda Mall previously (month back) – Rs20 Small, Rs 30 Medium and Rs 40 High
Now, No “actual” small and real small has become 35 now and 45 for high... [Are they the farmers who have given their blood to grow this ]
(In Sathyam complex, many price hikes are really too much for no reason...)
Chips packet (Gangotree) previously (three months back) - Rs. 15
Since last two Months the same packet costs - Rs. 20 (again, I do not find any justification)
Room Clean (just once) - Rs. 200, that's bcos they cleaned IT guys room.
(The moment you say that you are from Software company, the price automatically increases...)
We guys already pays big taxes from our salaries and goes on paying other taxes too (starting from Hotel Sangeetha "Vadai" to Scotch in a bar), it's time to think and pledge ourselves that we stop spending just for one month...
Reason(s) why we should stop spending alteast for a month:
1. 70% of the IT guys occupies the restaurants.
2. 80-90% of the IT guys goes to coffee shop, hang around places, bakeries, etc.
3. Most of the IT guys goes to Sathyam complex, Movies
If we stop going / spending just for a month, their business automatically goes down and they would have no other choice except to bring down the price, that's what happened when IT industry was down three years back.
Somehow directly or indirectly we are responsible for this unjust price hike and now, only we could prevent this open robberies, please add your comments or experiences and keep forwarding this email to all your known people, I am sure even if 25% of us realizes and acts accordingly, it could and would make lot of difference to us.
(let's try and prevent unjust price hike)
Save the IT People from Debts
* Property market in Year 2001 -2004 was quiet Ok , People were able to buy Flats in reasonable rates .
*Year 2005 -2006 , Some of the well known builders started the rates boom , flat which was at the cost of Rs.900 Sq Ft now became 2200 to 2800
Q: Are there any additional facilities ?
--> No Same Scheme/Area , Flat sold at 10 Lacks Now selling at 25 Lacks .
Q: Why Property increased so High ?
--> IT people competition to buy sweet home ..
Q: Who is going to Benfit from this Property Boom ?
--> Only Builders and some of the Politicians
Q: How is the Bank's support on Home Loans ?
--> Last Year , Bank gave the loan's at flexible mimimum rate,Now Banks has sufficient number of customers ,
(Trap) Slowly Banker's increasing interst at % 0.5 every month .
IT People Who bought house for 22 Lacks for 20 Yrs , Now became 23 Yrs with raise of 0.5 %
Q. How some IT people can face the problems in Future ?
--> Companies are Project Based , If Projects are not there then People will not be there .
Q. IT salaries are high in Market , How much actually IT-people getting in Hand ?
--> People, Who bought house of 22 Lacks to 40 Lacks They need to pay EMI
15,000 to 35,000 for 20 Yrs. If Bank keeps same interst rates .
Suppose Salary is 35- 40 K Per Month, 20K will be the EmI
Q. Is there any "Terms & Condition or Processes to increase rates" ?
--> No , Depends on Buiders Greediness . Every builder follows the different strategies
Builder sold one flat 1500 Per Sqft in Morning and 1800 Per Sqft in the Evening ,
There are no records maitained ..
Q. Who made builders smart & greedy ?
--> Greedy IT people ..
No body is asking , Flat was sold at 12 Lacks , Why now 24 Lacks ?
Q. Is Corporation water & MESB available to all schemes ?
--> Some of the area don't have the Corporation water at all , People surviving on Water Tankers.
** MESB .. Under Table ,can be managed easily .
Q. What will be the condition If We are not able to Clear the Loan ?
--> Depends on individual capabilities
Q. What wiil be the actual 'area of living' or carpet area if the builder proposes 1000 sft?
....> The actual carpet area will be 800-850 sft only. The common area is also included in the proposal.
If two flats are in the same floor, then the builder cheats both the residents by collecting
How do Builders cheat buyers? ... Let us see with a simple example
Builder XXXX proposes a flat in a decent residential area.
Rate ( Unit Price ) - Rs. 3500 sft.
Registration - Rs. 40 per sft.
EB and drainage - Rs. 50,000
Covered Car park - Rs. 1,25,000
Corpus fund - Rs. 50000.
For a 1000 sft flat ( 850 sft carpet area ), the approximate cost will be Rs.37,65,000. In the same plot area ( measuring 2 grounds) the builder would have constructed 8 or 10 flats.
Let us see how a builder earns his profit
Total sales for the builder - 37, 65,000 *10 = 3, 76, 50000 ( 3.76 crores)
Cost of the land - Rs. 40 laks per ground
1) Total cost of the land - 80 lakhs for two ground ------- A
Total builtup area for 10 flats - 10*1000 sft = 10,000 sft
Construction cost per sft ( for normal specification) = Rs. 900 per sft
2) Total construction cost - 10,000 * 900 = Rs. 90,00,000 -------------- B
3) Other expenses for the builder - Rs. 20 per sft = Rs. 2,00,000 ................. C
Total expenses for the builder = A+ B+C
= Rs. 80,00,000 + Rs.90,00,000 + Rs. 2,00,00
= Rs. 1,72,00,000 ( 1.72 crores approx)
Total Sales = Rs. 3.76 crores - Rs. 1.72 crores
Total profit of the builder = Rs. 2.04 crores.
Let us see the share of each resident
1. Cost of land = Divided share among the other 10 residents
= Rs. 80,00,000 / 10
= Rs. 8,00,000
2. Construction cost = Rs. 900 * 1000
= Rs. 9,00,000
3. Other expenses = Rs. 2,00,000 ( approx)
Total = Rs. 19,00,000 ( Nineteen lakhs)
The total share for each resident is Rs. 19,00,000 ( Nineteen lakhs only )
but he pays Rs. 37.5 laks for the flat.
Q. How We can stop Builders -Property Boom ?
1) IT People should think about buying flats for atleast next 1-2 Yrs .
2) Onces rates are reasonable , With some legal process get the Booking .
3) Check Facilities, Convince, Road Approach, schools & Mainly co-operation water
4) Ask Questions If I buy 1/2 BHK at 12 to 30 Lacks , Do I get reasale value in future?
5) Today you are capable for paying 1000 -3000 maintains per month ? Will will be the same case
after 20-30yrs after retirement .
6) In All, Don't stretch more to get the more & more loans other wise it will create unnecessary
pressure and tension .
7) Read the above mentioned calculation carefully, when you are about to buy a flat pls keep this in mind.
*****

Tuesday, November 14, 2006

குங்குமத்தில் வலைப்பதிவுகள்






 தடாலடியாக குங்குமத்தில் வந்த நமது வலைப்பதிவாளர்களின் பதிவுகள் இங்கே உங்கள் பார்வைக்கு.

குங்குமம் ஆசிரியர் குழுமத்திற்கும் ,பொறுப்பாசிரியர் கெளதம்ஜி அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.

இது போன்ற ஊக்கமருந்து எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது.(நல்ல வேளை இந்த ஊக்க மருந்துக்கெல்லாம் தடையில்லை) பிற்காலத்தின் பதிவர் வட்டம் ஒரு சீர்மிகு ஊடகமாக மாறும் ..மாற வேண்டுமென விரும்பும் உங்களைப்போல் நானும் ஒருவன்.

Friday, November 03, 2006

ஜோடிப்பொருத்தம்-சரியா இருக்கா ? சொல்லுங்க?








 


 

Thursday, November 02, 2006

ஒரு நாள் முதல்வன்







நேற்று சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது பார்த்த ஒரு சிறு செய்தி மனதை என்னவோ செய்தது.

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மருத்துவர்களால் கைவிடப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.சுமார் 10 வயதே ஆன அப்பாலகனுக்கு ஒரு சிறு வயது ஆசை..ஆசை என்பதை விட லட்சியமாய் இருந்திருக்கிறான். அந்த லட்சியம் ஒரு போலீஸ் அதிகாரியாகி நாட்டுக்கு சேவை செய்வதென்பதாம். அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல் கனவுக் கண்டிருக்கிறான். ஆனால்,அவனது பெற்றோர்கள் அதனை வெறும் கனவாய் விட்டிடாமல், அவனது இறுதி நாட்கள் முடிவான நிலையில், அவனது லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்தார்கள். அதன் பயனாக ஆந்திர டி.ஐ.ஜி. யுன் உத்தரவின் பேரில் ஒரு நாள் காவல் துறை அதிகாரியாக பணி உத்திரவு அளிக்கப்பட்டது.

(இதற்கு மேல் என்னால் தகவல்களைத் திரட்ட முடியவில்லை..யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்)

//இதற்கு ஏற்பாடு செய்தது "Make a Wish Foundation" என்ற தொண்டு நிறுவனம்.
sabapathysaravanan.//
பின்னூட்டமாக வந்த இந்தத் தகவல் சார்ந்த வலையைத்தேடிய போது பிரமிப்பாய் இருந்தது.
உலகில் செயல்களை பெரும்பாலோனர் (என் போன்ற) வெறும் பேச்சோடு மறக்கின்றனர்.

அந்த தொண்டுநிறுவனத்திற்க்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
  


http://www.wish.org/about/the_first_wish


அந்த தாயின் முகத்தில் வந்த ஆனந்தக் கண்ணீரும்,அச்சிறுவனின் முகத்தின் கம்பீரத்தையும், மகிழ்வையும் பார்த்து கண்ணீர் வந்தது.
அந்தப் பெற்றோரையும் அந்த மனித நேயமிக்க அதிகாரிகளையும் பார்த்து வணங்கத்தோன்றியது.

இப்போது மேலும் சில விபரங்கள் கிடைத்துள்ளது.

பெயர்: மஹாக்கோதரி( Mahak Kothari )
வயது : 8
பதவி : inspector of police
இடம் : inspector of the Jubilee Hills police station

மேலும் விபரங்களுக்கு http://www.hindu.com/2006/11/01/stories/2006110100612200.htm



இன்னும் எத்தனை நல்லவரை இத்தேசம் இழக்கப்போகிறதோ!

 

Wednesday, November 01, 2006

தமிழ் தந்த மருத்துவம்.

என் இனிய வலைப்பதிவாளர்களே!
எதைச் சொன்னால் ரசிப்பார்கள் என்று குழம்பாது எண்ணியவற்றையெலாம் சொல்ல இடம் தந்த blogger அணியினருக்கு நன்றி கூறி இந்த தமிழி முதன்முறையாக மருத்துவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறான்.இது வரை எனக்களித்த ஆதரவை இப்பதிப்பிற்க்கும் அளிப்பீர்கள் என்று துவங்குகிறேன்.
(ஹி ஹி... எல்லாம் நேத்து பார்த்த முதல்மரியாதை படத்தின் பாதிப்பு)

அதாகபட்டது சார்..மனுசனாகப்பட்டவன் சாப்பாட்டுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை அம்மா அப்பா-க்கு கூட கொடுக்கிறதில்ல.நம்ம அம்மிணிகளும் சாப்பாடு என்றால் அது சரவணபவன் கறின்னா அது பொன்னுச்சாமி ஹோட்டல்னு முடிவுக்கு வந்துட்டாங்க சார்.

அதுவும் இந்த I.T.-யில் வேலை செய்யும் மணிகளோ அம்மாவையும் மாமியார்களையும் நம்பியே வாழ்றாங்க சார்.

எல்லாரும் நினைக்கிறமாதிரி மருந்துங்கிறது தனியாயில்ல சார்.அதாகப்பட்டது சரியா அளவா தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் அதுவே அருமருந்துன்னு யாரோ சொல்லியிருக்காங்க சார்.

சே!! லேகியம் விக்கிறவன் மாதிரியே எழுத்து வருதுங்க...மன்னிக்கவும்!

பதார்த்தகுண சிந்தாமணி என்ற ஒரு பழம்பெரும் பொக்கிஷ நூல் எனக்கு கிடைத்தது.அதிலுள்ள நல்லவற்றை உங்களோடோடு பகிர்ந்திட வந்த ஆசையால் இப்பதிவு.

பூமித்தாய் உண்வுக்காய் நமக்களிப்பன நான்கு:
1.மரம்
2.செடி
3.கொடி
4.புல்

மேற்க்கண்டவற்றிலிருந்து நமக்கு கிடைக்கும் பதார்த்தங்கள் எட்டு:
1.வேர்
2.பட்டை
3.கட்டை
4.ரசம்
5.இலை
6.புட்பம்
7.பழம்
8.வித்து

மேற்க்கண்டபதார்த்தங்களின் உதவியால் நாம் அடையும் ருசிகள் ஆறு:
1.கசப்பு
2.உப்பு
3.தித்திப்பு
4.கார்ப்பு
5.புளிப்பு
6.துவர்ப்பு

இப்படியாக எத்தனையோ பொருட்கள் இருந்தாலும் பஞ்சபூதங்களும் மனிதனின் குணத்தையும் உடல்நலனையும் நிர்ணியிக்கிறது.

பஞ்சபூதங்கள்
1.ப்ருதி( மண் அல்லது நிலம்)
2.அப்பு (நீர்)
3.தேயு ( நெருப்பு)
4.வாயு (காற்று)
5.ஆகாயம் (வானம்)

அதில் நமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலையாயப் பிரச்சனையாய் இன்று இருப்பது அப்பு என்றழைக்கப்படும் நீர். சென்னையில் கடந்த 5 வருடங்களில் மினரல் வாட்டர் என்ற கலாச்சாரம் வேரோடிப்போயிருக்கிறது. மற்றநாடுகளில் எப்படி என்று தெரியவில்லை.அதுவும் இந்த I.T. மக்கள் பெருகிய பின்னர் Hygienic என்ற ஒரு வார்த்தையை வைத்தே சம்பாதித்த ஆலோசனையாளர்களும் மருத்துவரும் மற்றும் வியாபாரிகளும் மிக அதிகம்.
கிராமங்களில் ஊருணி என்றழைக்கப்படும் அனைத்துப்பயன்பாட்டு நீர் சேகரிப்புக்குளங்களை இவர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்.இதனிடையே நமது நடிகைகளும் மினரல் வாட்டர் நிறைத்த குளங்களில் தான் உடலழகு காட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார்களாம்.


நீர் என்பது சித்தமருத்துவத்தில் ஒரு தலையாய இடத்தைப் பிடிக்கிறது என்றால் அது மிகையாகாது.

நீர் என்பது,

1. மாரி நீர்
2.ஆலாங்கட்டி நீர்
3.பனிநீர்
4.தண்ணீர்
5.ஆற்று நீர்
6.கங்கை,காவிரி,யமுனை,கோதவரி,துங்கபத்திரா,நருமதா,சிந்து,வைகை,சித்திர,தாம்பிரபரணி,பச்சையாறு போன்ற ஆறுகளின் நீர்
7.தாமரைக்குளம்,அல்லிக்குளம்,அதிகுளிர்ச்சியுள்ள குளம் என்ற குளங்களின் நீர்.
8.ஏரி நீர்
9.ஓடை நீர்
10.கிணற்று நீர்
11.ஊற்று நீர்
12.பாறை நீர்,சுக்கான்பாறை நீர்,கரும்பாறை நீர்
13.அருவி நீர்
14.அடவி நீர்
15.சிவந்த நீர்
16.கறுத்த நீர்
17.வயல் நீர்
18.நண்டுக்குழி நீர்
19.பாசி நீர்
20.சுனை நீர்

அப்பா !! எத்தனை வகைகள் மேற்கூறிய ஓவ்வொன்றிற்க்கும் தனியே மருத்துவ குணங்கள் கூறப்பட்டுள்ளது.இதில் ஏழைகளின் கண்ணீர் நல்ல வேளையில்லை.

ஆனால், நாம் அதாவது சென்னை போன்ற தண்ணீரை காசு கொடுத்து வாங்கி பிளாஸ்டிக்டப்பாவில் வைத்துக்குடிக்கும் நீர் என்னவென்று தேடிய போது,
கிடைத்த வெண்பா:

சந்திரா தித்தர்வலி சாராத நீர்புழுதுற்
கந்த மதிசேறு கனப்பிலையு-திர்ந்த நீர்
தங்குசுவை யில்லாநீர் சாற்றுமிவை ஸ்நானப
னங்களுக் காகவுறினே யாம்.

பொருள்:
சந்திரன்,சூரியன் மற்றும் காற்று புகாத மற்றும் அவை அணுக இயலாத இடத்திலிள்ள நீர் மற்றும் கிருமி,துர்வாசனை,ருசியில்லாததுமான நீரானது குளிக்கவோ குடிக்கவோ சமைக்கவோ ஒவ்வாதது.


சரிவிடுங்க நம் தலை எழுத்து இனி சில நீர் மருந்துகளைப் பார்போம்.

நீராகாரம்-
நீராகாரம் என்பது சுமார் 200 மில்லிகிராம் அரிசியை சுத்தம் செய்து பின்பு (பற்ற வைக்கப்பட்ட ) அடுப்பிலசுடு நீரிலிட்டு கொதிக்கவைத்து சிறிது சுவைக்கேற்ப உப்பையிட்டு 20-30 நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டி ஆறவைத்து பின்னர் மீண்டும் அந்த பதார்த்தம் மூழ்கும்வரை நீர் ஊற்றி சுமார் 6-10 மணி நேரம் கழித்து பாத்திரத்திலுள்ள தெளிவாய் உள்ள நீரை (மேலாப்படி) எடுத்தால் கிடைப்பது நீராகாரம்.(என்ன புரிகிறதா நண்பர்களே...!)

இது வாதம் பித்தம் மற்றும் வயிற்றுப்புண் நீக்கவல்லது. நல்ல தாகம் தீர்க்கும் குளிர்பானம் ஆகும்.மேலும் உடல்-முக அழகையும் ததரவல்லது.

உப்பு நீர்:
சிறிது உப்பு சேர்க்கப்பட்ட நீர் சரீரத்தின் வாயுத்தொல்லைகளை நீக்கும்(வாயுத்தொல்லை பற்றிய விபரங்களுக்கு சூரியாவை அணுகவும்).அதிகமாக சாப்பிட்டால் வரும் அஜீரணம் நீங்கும்.குடல்புண்ணிற்கு நல்ல மருந்து. காலையில் வாய் கொப்பளிக்கும் போது சிறிது உப்பிட்ட நீரை பயன்படுத்துங்கள்.

வெந்நீர்:
அளவான சூட்டிலுள்ள வெந்நீரைக்குடித்தால், நெற்றிவலி,புளியேப்பம்,சுரம் போன்றவை குறையும்.
காய்ச்சியாறிய வெந்நீரானது விக்கல்,அதிக வயிற்றுப்போக்கால் வரும் துன்பம்,மயக்கம்,சில்வண்டுக்கடியால் வரு விஷமுறிவு,நெஞ்சுசளி,குன்மம் முதலியவை நீக்கும்.

அதுவும் உணவுக்கு முன் அருந்தினால் பசி மந்தமாகும் எனவே உணவுக்குப்பின் தான் வெந்நீர் அருந்த வேண்டும்.





இளநீர்:

இதில் மட்டும் ஒரு பத்துவகை இருக்கிறது.இதை நாம் பண் பார்த்து பயன்படுத்துவென்பது இயலாது என்பதால், நேரிடையாக சொன்னால்,முறையாக அருந்தும் வெந்நீர் வாதம்,ரத்த அழுத்தம்,பித்தம்,கண்நோய்,சொறி போன்ற சரும நோய்கள் ,உடல் வெப்பம்,மூத்திர சம்பந்தமான நோய்கள் மலப்போக்கு போன்ற வயிற்று உபாதைகளிலிருந்து விடுபடலாம்.

இதில் செவ்விள நீர்- வாதம் ,பித்தம் இளைப்பு போன்றவற்றிற்க்கு அருமருந்தாகும்.

மேலும், காலையில் உணவுக்கு முன் அருந்தினால்: பசி நீங்காது ஆனால் குன்மம் வரும்,
மாலையில் உணவுக்கு முன் அருந்தினால்: எரிகிருமிகள் அழியும்.

உணவுக்கு பின் அருந்தினால்: வாதம் , பித்தம்,கோபம் தணியும்.மலச்சிக்கல் நீங்கும்.தேகம் மினுமினுக்கும்.

அதுவும் இளநீரை காய்ச்சியாற்றிக்குடித்தால் இன்னும் சிறப்பு.
இருமல்,வறட்சிசுரம் முதலியன் உடனே நீங்கும்.


நமது முன்னோர் பலரின் கருத்தும் ,கண்டுபிடிப்புகளும் இன்று வெளிநாட்டினர் உரிமம் கொண்டாடிவருகின்றனர் என்பதை நினைத்தாலே வேதனைவருகிறது.

இருக்கட்டும் உண்மை என்பது அழியாதது.

இன்னும் நிறைய வரிசையிலிருக்கிறது நண்பர்களே. உங்களின் ஆதரவு இருந்தால் ..இதனை ஒரு தொடர்பதிவாய் பதியவே விழைகிறேன்.ஆண்டவன் சித்தமிருந்தால் விரைவில் ....நன்றி!