"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, November 22, 2006

ஆய்த எழுத்து ?






உருமாறுவது மனித உருவம் மட்டுமல்ல ! மொழிகளின் உருக்களும் தான் !!

காலப்போக்கில் இலக்கணம் மாறும் என்பதும் உண்மை.

நான் முயன்ற வரை இந்த யூனிக்கோடு முறையில் ஆய்த எழுத்தை எப்படி உருவாக்குவது எனத் தெரியவில்லை.

படங்களைப் பாருங்களேன். எவ்வாறெல்லாம் தமிழ் உருமாறியிருக்கிறது என்பதைப் பாருங்கள்.



வலையுலக நண்பர்களே ! நாம் கொண்டாடும் மொழியே உருமாறக் கூடியது. 60 வயதிற்கு மேல் ஆனவர்களின் எழுதச் சொன்னால், அதில் ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு என்று நம்மில் பெரும்பாலோனவர்கள் 
மறந்து போனதைக் காணாலாம்.

ஆகவே, பெரும்பாலோனர் மறந்த ஆய்த எழுத்தை மட்டும் ஏன் வலைப்பதிவாளர்கள் எழுத்தில் பயன்படுத்துகிறார்களோ தெரியவில்லை.

ஒரு நல்ல ஊடகத்தை, இந்த வியாபார காந்தங்கள் ஊடக வியாபரத்திற்கும், தனிக்குழும மேன்பாட்டிற்கும் பயன்படுத்துவதைப் பார்த்தால் மனசை நெருடுகிறது. பொன்னான நேரத்தை வீணடிக்கிறோமோ என சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.

நான் வலையில் பதியத் துவங்கி சில மாதங்களே ஆகிறது. இந்த சில வாரங்களாக ஒருவரையொருவர் காழ்ப்புணார்ச்சியுடன் அடித்துக்  கொண்டும் , கூட்டணியமைத்து பின்னூட்டப்போர் நிகழ்த்துவதைக் காணும் போது வேதனை தான் வருகிறது.

யாரையும் குறிப்பாய் கூற விரும்பவில்லை.
யாரோ ஒரு பதிவில் சொல்லியது போல், அப்படி நாம் எழுதித் தான் ஆக வேண்டுமா!? என்று கூட தோன்றுகிறது.



விடைபெற்றுச் செல்லாமென்றால் வழியனுப்ப யாருமில்லை!!

சரி தான் . போதுமென்று நினைக்கிறேன். பின்பு என்னையும் அரசியலுக்கு இழுப்பார்கள்.

ஆகவே! புலவர்களுள் சர்ச்சை தேவைதான்! ஆனால், அது சண்டையாக மாறிவிடக் கூடாது. எனவே! சாந்தமாக உரையாடுங்கள். ( எழுத்தாடுங்கள் !? )

வாழ்க ! வளமுடன்!

No comments: