"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, November 17, 2006

தேர்தலுக்கு தேர்தல் ?




அதிரடி அறிக்கைகள் மற்றும் பேச்சுகளுக்குப் பேர் போன 
பா.மா.க. ஒரு அருமையான விசயத்தைத் துவக்கி வைத்துள்ளது.

அது எம்.பி., எம்.எல்.ஏ, தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறை பாமகவில் அறிமுகம் என்பதே.

இந்தியாவில் முதன்முறையாக, பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் புதிய முறையை பாமக நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமகவின் மாநில பயிலரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

இங்கு இக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி தொடர்பான பயிற்சிகள் சில ஆண்டுகளாக நடை பெறுகிறது. பாமகவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் நிர்வாகிகளின் தலைமைப் பண்பை அதிகரிக்கவும், அவர்களின் தனித்திறனை மேம்படுத்தவும் புதிய முறைகளை ராமதாஸ் புகுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆய்வு நடத்தும் கூட்டமும், அரசியல் பயிற்சி வகுப்புகளும் தைலாபுரம் பயிலரங்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில்பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இது முடிந்ததும், இவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 30 நிமிடம் நடந்த இத்தேர்விற்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்தார். இக்கட்சியின் எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும், பேராசிரியர் சிலர் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் அளித்தனர். (தேர்வு முடிவுகள் தெரியவில்லை.)

இதுபோன்ற தேர்வு, அரசியல் பயிற்சி பெறுகின்ற பாமகவினர் ஒவ்வொருவருக்கும் நடத்தி மதிப்பெண் வழக்கப்படும் என்றும், இந்தியாவில் இதுவரை எந்தக் கட்சியும் தனது கட்சியினருக்கு இதுபோன்ற பயிற்சியும், தேர்வும் நடத்தியதில்லை என்றார் ராமதாஸ். பாமகவைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்களுக்கும், 5 ஆயிரம் ஆண்களுக்கு கட்சி தொடர்பானபயிற்சிகள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு கட்சிகளில் இவ்வளவு பேருக்கு பயிற்சிகள் இதுவரை அளிக்கப்பட்டதில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.




கண்ணாடி முன் நிற்கும் பயிற்சி: பாமகவினர் காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொள்ள வேண்டிய பயிற்சியைப் பற்றி ராமதாஸ் விரிவாக விளக்கினார். கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தவாறு, நான் தன்னம்பிக்கை மிக்கவன், சக்திமிக்கவன், நான் சாதனையாளன், என்னால் முடியும், வெற்றி நிச்சயம் என்று கையை உயர்த்தியபடி கூற வேண்டும். இப்படிச் செய்வதால், உற்சாகத்தோடு கட்சிப் பணியாற்ற முடியும் என்றார் ராமதாஸ்.


இது போன்ற பாசறைகள் ரத்ததின் ரத்ததங்களுக்கும் , உடன் பிறப்புகளுக்கும் பழகிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், முதன்முறையாக ஒரு மதிப்பூட்டு முறையை அறிமுகப்படுத்தி நல்ல துவக்கமாக மாற்றியிருக்கிறார் ராமதாஸ் என்றால் அது மிகையல்ல.

அதே சமயம் எவ்வளவோ நல்ல கெட்ட விவாதங்கள் சூடாய் இருக்கும் போதும் இது போன்றவற்றைச் செய்வது என்பது வாழ்த்துக்கு உரியது.

இனி ஒரு புரட்சி போல் ஏதேனும் நடக்கும் வரை ,

மக்களுக்கு இவர்கள்  அல்லது அவர்கள் என்றே choose the best இருக்கும் வரை,

நல்லவரா தெரியாது !ஆனால் ரொம்ப மோசமான ஆள் எல்லாம் கிடையாது!  என்ற ஆதங்கத்துடன் நாம் ஓட்டுகள் அளிக்கும் வரை,

என்ன நடந்தாலும் கவலையில்லை !? எனக்குத் தேவை 800 சதுர அடி, ஒரு சிறிய கார், என் குழந்தைக்கு கான்வென்ட் , ஐந்து இலக்கச்சம்பளம் என்ற ஒரே கொள்கையுடன் மட்டுமே வாழ்ந்து வரும் சமுதாயம் இருக்கும் வரை,

எப்படியாவது ஒரு புதுப்பதிவும் 10 பின்னூட்டமும் என்ற என்போன்ற வலைபதிவாளார்கள் இருக்கும் வரை.... :)

நடக்கட்டுமே இது போன்ற விசயங்கள் ?!

நம்புவோம் ! நல்லது நடக்குமென ?!


கொசுறு :
கீழ்க்கண்ட கார்டூனில் இருக்கின்ற மாதிரி அழ கத்துத் தரமாட்டார்கள் என நம்புவோம்.


No comments: