"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Saturday, March 03, 2007

கப் கண்ணா கப்!





சென்ற உலகக் கோப்பையய் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திர முடியாது.
உலகின் பல பகுதியில் வாழும் இந்தியரையும், இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையில் வாழும் சகோதர சகோதரிகளையும் இணைக்கும் அதாவது மகிழ்ச்சியுடன் கை உயர்த்திப் பாராட்டும் ஒரே விடயம் இப்போதைக்கு அப்துல்கலாமும் அதற்கடுத்து கிரிக்கெட்டும் என்றால் மிகையாகாது.

அதுவும் பாகிஸ்தானும் இந்தியாவும் களத்தில் உள்ள போது இரு படைகளின் மோதலை காண்பது போல் அனைவருக்கும் ஒரு எண்ணம்.

ஆகவே, நமது படை வீரர்கள் தாம் இவர்கள் என்று எண்ணுமளவிற்கு மாறிப் போன நமது கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்கள் மற்றும் கிரிக்கெட் சூதாட்டங்களில் மாட்டாது கோப்பையை வென்றெடுத்து வருவார்கள் என்பது ஒவ்வொரு ரசிகரின் இந்தியரின் வேண்டுதல்.


மேலும் விவரமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.



கடைசியாக ஒன்றுங்க! சென்ற முறை மாதிரி "come on india come on! " என்று சொல்ல வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். பின்னே! போன தடவை அப்படித்தான் நம் வீரர்கள் மக்கள் ஆசையாக கூப்பிடறாங்கன்னு கிளம்பிவந்துடாங்களாம்.
:)
அப்புறம்,கொஞ்சம் கார்டூன்கள்.















No comments: