"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, December 06, 2006

சிறு சேதி !




இன்றைய காலக்கட்டத்தில் நகைக்கக் கூட நேரமின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு நண்பர் குழுமம் அனுப்பி மகிழும் சிறு சேதிகள் (SMS) , படிக்கும் கணங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்றால் அது மிகையில்லை.


மேலும், நம்பிக்கை தரும் சிறு சேதிகளும் அவ்வாறே! ஒவ்வொரு சேதியை உருவாக்கவும் யாரோ ஒருவர் நேர விரயம் செய்கிறார் என்றாலும், அது சிலர் மனதை பூக்க செய்கிறது.
அது போல் நான் பெற்ற சேதிகளின் ஒரு சிறு 'தொகுப்பூ' உங்களுக்காக!


நல் கருத்துகள் :


1. நம்மை விரும்பியவர்களை ஏமாற்றாதே! ஏமாற்றியவர்களை விரும்பாதே!



2. ஒரு நல்ல நண்பன் உன் முதல் கண்ணீர் துளியைப் பார்ப்பவன்! இரண்டாம் கண்ணீர்துளியை கையில் ஏந்தி, மூன்றாம் துளியை நிறுத்தி, நாலாம் துளியை சிரிப்புடன் வர வைப்பவன்.


3. நம் எல்லோருக்கும் சரிசமமான திறமைகள் இருப்பதில்லை. ஆனால், எல்லோருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள சரிசமமான வாய்ப்புகள் அளிக்கிப்படுகிறது.


4. முயற்சிகள் தோல்வியடையலாம். முயற்சி செய்ய தோற்று விடாதே!


5. மேடு பள்ளமில்லாத பாதைகள் நல்ல ஓட்டுநரை உருவாக்குவதில்லை! அலையில்லாத கடல் நல்ல மாலுமியை உருவாக்குவதில்லை! மேகங்கள் இல்லாத வானம் நல்ல வானூர்தி வல்லுநரை உருவாக்குவதில்லை! தோல்விகள் இல்லாத வாழ்க்கை நல்ல மனிதரை உருவாக்குவதில்லை!


6. வெற்றிக்கனவுகள் என்பது தூங்கும் போது வருவதில்லை. அவை நம்மை தூங்கவிடாது செய்வது.


7. ஆறு போகும் பாதையில் போக நீந்தாதிரு! நீ போகும் பாதைக்குச் செல்ல நீ நீந்தியாக வேண்டும் !


8. ஒரு பழத்தில் உள்ள விதைகளை நீ எண்ணிவிடலாம்! ஆனால், அவ்விதைகளில் எத்தனை விருட்சங்கள் உள்ளன என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். விதைகளை எண்ணுவதை விட்டுவிட்டு, விதைகளை விதைக்கப் பழகு!


9. நீ வெற்றி பெற்றால் யாரிடமும் விளக்கத் தேவையில்லை! ஆனால், தோல்வியுற்றால் யாரும் விளங்கக் காத்திருப்பதுமில்லை!


இளைஞர்களுக்கான(ஹி ஹி) தத்துவங்கள் :


1. பெண் தோழி என்பவள் பல்விளக்கும் பிரஷ் போன்றவள். பல்விளக்கும் பிரஷை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிகாதே! 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடு.



2. எப்பொழுதும் நீ பேசாது, எந்தப் பெண்ணையும் நிறைய பேச அனுமதிக்காதே! பிற்காலத்தில் , நீ தன்னந்தனியே பேச நேரிடும்.


3. நர்ஸ் நம்ம கையப் புடிச்சா அது 'செக்கப்' , நாம நர்ஸ் கையைப் புடிச்சா அது 'பிக்கப்' !


4. திருவள்ளுவர் 1330 குரள் சொன்னாலும், அவர் 1 குரலில் தான் பேச முடியும்.


5. நீ சிக்கலில் மாட்டித் தவிக்கும் போது அறிவு சொல்றதைக் கேட்காதே! அது சரி இருந்தாதானே கேட்பாய்!?


6. " ஏம்பா! உனக்கு புலி நகம் வேணும்னா ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வா! ஏன்னா! அன்னைக்குத் தான் எப்பவும் நகம் வெட்டுவேன் !


7. நான் கடவுளிடம் கேட்டேன்! உங்கள் காதலுக்கும் எனது காதலுக்கும் வித்தியாசமென்னவென்று, அவர் சொன்னார் " எனது காதல் வானத்திலுள்ள பறவை போல, உனது தட்டிலுள்ள பறவை போன்றது! அவ்வளவே".


நகைச்சுவை:



1. உலகின் மிக குறுகிய ராஜினாமாக் கடிதம்: " மதிப்புக்குரிய ஐயா! உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன்."

2. உனக்கு நினைவிருக்கிறதா! சின்ன வயதில்,ஒரு நாள் நாம் பொம்மைக் கடைக்குச் சென்றோம். நீ கடைக்காரரிடம், "அந்தக் குரங்கு பொம்மை வேண்டும் ? " என்றாய். அவர் சொன்னார் " அது கண்ணாடி என்று! "


3. உன்னை நினைத்தாலே எனக்கு தூக்கமே போய் விடுகிறது! சிறு வயது முதலே எனக்கு பேய்! பிசாசு! என்றால் ரொம்ப பயம் தெரியுமா ?!


4. " ஏய் ! உன்னோட ஒரு வாரம் வந்து தங்கட்டுமா? சொல்லுப்பா!" இப்படிக்கு 'மெட்ராஸ் ஐ."


5.
ஆசிரியர் : " நமது கண்ணபிரான் பிறக்காமிலிருக்க, கம்சன் என்ற அவரது மாமன் கண்ணபிரானின் தாய்,தந்தையரை சிறையில் அடைத்து, அவருக்கு முன் பிறந்த 7 குழந்தைகளையும் கொன்றான்"


மாணவன்1 : " ஏன் சார்?"


ஆசிரியர் : " அதாவது கம்சன் ஜாதகப்படி , 8 வது குழந்தை தான் கம்சனை கொல்லுமென்பது விதி! எனவேதான் அப்படி செய்தான்!"


மாணவன்2: " அது சரி சார்! அதுக்கு கண்ணன்பிரான் அப்பா! அம்மாவை ! ஒரே சிறையில் அடைக்காமிலிருந்தாலே போதுமே ?! "




சர்தார்ஜி ஜோக்குகள் :

1.

சர்தார்ஜி1 : " இந்த பீரில் நிறமில்லை! "


சர்தார்ஜி2 : " இந்த பீரில் திடமில்லை!"


சர்தார்ஜி3 : " இந்த பீரில் சுவையில்லை!"


பார் அட்டெண்டர்! : " அடப் பாவிகளா! அது சோடாடா !"


2.


டாக்டர் : " வயிறு சம்பந்தமான இந்த நோய் வராமிலிருக்க தினமும் இரண்டு சொம்பு தண்ணீர் குடிங்க!"


சர்தார்ஜி : " அய்யோ! டாக்டர்! எங்க வீட்டில் ஒரு சொம்பு தானே இருக்கு ! "


3.


குட்டி சர்தார்ஜி : " கடவுளே ! எப்படியாவது மும்பையை இந்தியாவின் தலைநகராமாக்கி விடு!"


கடவுள் தோன்றிக் கேட்டார். "ஏன்பா? "


குட்டி சர்தார்ஜி : " ஏன்னா! நேத்து பரீட்சையில் அப்படித்தான் எழுதினேன்!"


4. டாக்டர் : "கொசு கடிக்காமிலிருக்க இந்த மருந்தை தடவுங்க!"

சர்தார்ஜி : " அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சு தடவறது!?"

5.


கடைக்காரர் : " சார் ! இந்தக் கண்ணாடியில் என்ன விசேசம் என்றால், 10வது மாடியில் இருந்தும் கீழே போட்டுங்க! தரையிலிருந்து 1 அங்குலத்திற்கு மேல்வரை உடையாம இருக்கும்!"


சர்தார்ஜி : " எனக்கு 2 பார்சல்"


6.


குட்டி சர்தார்ஜி : " அப்பா! இன்னிக்கு ராத்திரியிலிருந்து நம்ம பணக்காரர் ஆயிடலாம்.

சர்தார்ஜி : " எப்படிடா!? "

குட்டி சர்தார்ஜி : " இன்னைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதென்று சொல்லித்தரப் போறாங்க!"


*********

2 comments:

Anonymous said...

கலக்கிட்டீங்க போங்க

கவிதா | Kavitha said...

Too long post.. two post ஆ போட்டி இருக்கலாம்.. தத்துவங்கள் எல்லாமே சூப்பர்..ஆனா இது எல்லாம் தமிழ் லயா வந்தது உங்களுக்கு ?!!