"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, June 27, 2007

இது மொக்கையல்ல!

"காதலி,சாதிகள் சாம்பலாக
என்னைக் காதலி!"


"கடைவிழி கடைவீதியில் நிறுத்தியது!?"


"அமுத விஷங்கள் உருவானது ஒரிடமே!
நம்பவிலலை நான்! உன்னை பிரியும்வரை!!"


"காதலில் மட்டும் தான், மீன்கள் வலைவீச
புலிகள் மாட்டிக்கொள்கின்றன!?"


"ஆண் பெண்ணாவதும்,
பெண் ஆணாவதும் கம்னியூசமில்லை!
அது காதலிசம்!!"


"தேன் உறிஞ்ச வந்த வண்டை மலர் காதலனென்றாய்!
ஊர் கண்டு மிரண்ட என் கண்களை மானென்றாய்!
நேற்று வாங்கிய பொய்முடியை மயிலிறகென்றாய்!
பாவாடை தடுக்க நடந்த என்னை அன்னமென்றாய்!
மனம் தாவி வேறு மணம்புரிந்தால் என்னை குரங்கென்பாயோ!"


மேற்க்கண்ட எனது கவிதை முயற்சிக்கு காரணமாயிருந்த "விடை தேடும் வினா? " குழுமத்தின் " இப்பதிவும் எனது சிறு ஆர்வமும் காரணம்.

இதன் தெரிந்தெடுத்தலுக்கான கடைசித் தேதி "இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10." என்று அப்பதிவில் அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆக
சமீபத்தில் தான் கடைசித்தேதி கடந்து சென்றதால் காத்திருக்கிறோம் முடிவுகளுக்கு....!!!!


போட்டிக்கான பரிசில் புரவலர்கள் :
"Prize Sponsors
செந்தழல் ரவி
சிறில் அலெக்ஸ்
மங்கை
பாஸ்டன் பாலா
பொன்ஸ்"


போட்டியில் கலந்து கொண்டவர்கள் :
யெஸ்.பாலபாரதி
சேவியர்
தேவ்
சேதுக்கரசி
சென்ஷி
வசந்த்
ப்ரசன்னா (குறைகுடம்)
Hayah
அருட்பெருங்கோ
முத்துலெட்சுமி
வள்ளி

இத்தனை பேர் சார்பாகத்தான் கேட்கின்றேன். இது சரியா! இத்தாமதம் அலட்சியத்தின் காரணமாகவா??

இது போன்ற பரிசுப் போட்டிகளை அறிவிக்கும் முன் இவை ஆரோய்கமான போட்டியா என்று ஆராய்ந்த அக்குழும நண்பர்கள்
தாமதத்தினை எப்படி அனுமதித்தார்கள்.

எனது இப்பதிவை ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானமாகத்தான் கொள்கின்றேன்.


யாராவது பதில் கூறுவார்களா! இல்லை! வழக்கம் போலத்தானா??

கண்டிப்பாக இது மொக்கைப் பதிவல்ல!!??

6 comments:

சுந்தர் / Sundar said...

கவிதைக்கு பாராட்டுக்கள் !

✪சிந்தாநதி said...

நன்றி தமிழி

உங்கள் ஆதங்கம் நியாயமானதே.

எனது கணினியில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு பிரச்சினையால் கடந்த மூன்று வாரங்களாக இணையத்துக்கு வர இயலவில்லை. ஏற்கனவே இடையிடையே இருந்த பிரச்சினைகளால் போட்டி முடிவுகள் தாமதமாகி இருந்தது. நேற்று முன்தினம் தான் முழுமையான இணைய செயல்பாடுகள் வழக்கத்துக்கு வந்தது.

விடைதேடும் வினா தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்று நானும் மிகவும் ஆவலுடன் தொடங்கியது தான். ஸ்பான்சர்ஸ் ஒத்துழைப்பும் இருக்கிறது. எனவே எந்த தடையும் இன்றி இது மீண்டும் தொடரும்.

கவிதைப் போட்டிக்கான முடிவுகள் வரும் திங்கள் அன்று வெளியிடப் படும். அதுவரை மீண்டும் தாமத்த்திற்கு மன்னித்து, காத்திருக்க வேண்டுகிறேன்.

நன்றி.

RBGR said...

//கவிதைப் போட்டிக்கான முடிவுகள் வரும் திங்கள் அன்று வெளியிடப் படும். அதுவரை மீண்டும் தாமத்த்திற்கு மன்னித்து, காத்திருக்க வேண்டுகிறேன்.//


நன்றி. சிந்தாநதி அவர்களே!

இது நிச்சயமாக உங்களுக்கு வருத்தம் தர அல்ல...சில நல்ல முயற்சிகள் முடங்கிப் போய் விடக்கூடாதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே!

வாழ்க! வளமுடன்!

✪சிந்தாநதி said...

நீங்கள் இந்த பதிவு இட்டபோது இணையம் பார்க்கவே இயலாத நிலை. இன்று உங்கள் மறுமொழி என் பதிவில் கண்ட பிறகே இதைக்கூட அறிய முடிந்தது.இப்போது கூட இன்று இட்ட பதிவு என்றுதான் நினைத்தேன்.;(

சேதுக்கரசி said...

விடைதேடும் வினாவில் சும்மா ஜாலியா பின்னூட்டம் போட்டா உடனே நான் போட்டியில் கலந்துக்கிட்டேன்னு நினைச்சிட்டீங்களே :-) நமக்கு அந்தளவுக்கெல்லாம் கவுஜை எழுதவராதுங்க :-)

முடிவுகள் தாமதமாக வருவது உண்மைதான் ஆனா
* வீட்டைக் கட்டிப் பார்
* கல்யாணத்தைப் பண்ணிப் பார்
என்ற வரிசையில்
* கவிதைப் போட்டி நடத்திப் பார்
என்பதையும் சேர்க்கணுமாக்கும்! அனுபவப்பட்டிருக்கோம்ல!!

சேதுக்கரசி said...

http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html