"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, June 13, 2006

மலரின் நினைவுகள்.


ரோஜா!

கவினழகு கொண்ட கார்மேகாக்கூட்டம் எங்கள் சின்னரோஜாவின் சிரிப்பில் மெளன ஊர்வலமானது..

காதலைப்போலவே உன் வாழ்வும் கருகும் சிலநேர நிர்பந்தம் தானோ!
பெற்றோரின் கண்ணீரில் கரையும் காதலைப் போல.. (உன்னைப்) பெற்றாரின் கைகளில் கசங்கினாயோ!

உன் சொந்தமும் பந்தமும் நீ கைகளால் கற்பழிக்கப்படும் வரைதானோ!
காதலின் முன்மொழியான நீ மட்டும் முடிவாகி கசங்கினாயே!
கூந்தலை மணம் செய்து மணம் செய்த நீ... விதவையாகாமலேயே மரித்து போனாயோ!

உன் கதை கேட்டால் கவிதை கூட சற்று அழும்...?
வண்டுகளுக்கு ஊட்டம் கொடுத்த நீ ! ஏன் மன்மத வில்லின் மகத்தான அம்பாய் மாறினாயோ!

இன்று வண்டுகள் கூட தேன்ப்புட்டிகளை நோக்கி பறக்கும் போது..! நீ மட்டும் இன்னும் சருகுகளாய்..??

பல கலப்பு ரோஜாக்களுக்கு மணம் செய்து வைத்த உனக்குப் பட்டயம் அளிப்பது யார்?
அன்று காதலுக்கு கையூட்டான நீ ..! என்று காகிதப் பூக்களால் கடைசி வரிசையில்...!!

தேனீக்களுக்கு இடமளித்த உயிரிழந்த உன்னை இப்போது சாக்கடை ஈக்களும் புறக்கணிக்கிறதோ!
தென்றலில் தலையசைக்கும் நீ மானிடப்புயலால் மசக்கையானாயோ!

மொட்டான நீ மலர்ந்ததால் தானோ உனக்கும் சாவுமணி.
பூப் போன்ற பெண்ணே நீ பூப்பறிப்பதேன் !

உன்னைக்கவி பாட யாருமில்லையே? ஒரு வேளை நீ தமிழ் பூ இல்லையோ !

என் இனிய ரோஜாவே ஏன் முள் தாண்டி நீ வந்தாய்... முடிவாகிப் போனாயே...

நீ நித்தலமாய் நிச்சயம் பிறப்பாயோ?

அனைத்து ஊர்வலங்களிம் பங்கெடுத்த உன் சவஊர்வலத்தில் ஏன் குப்பைகள் மட்டும்..!

இது வளர்சிதை மாற்றமெனினும் யாராவது ஓர் ரோஜா மாலை வாங்கி வாருங்கள்... என் ரோஜா இறந்து விட்டாள்..!!

1 comment:

கவிதா | Kavitha said...

superbbbbbb.. !!! really nice. !! enjoyed