மீண்டும் முடிந்தால் மீட்க .....!!
விரைவில் தமிழ் நாட்டிலும் இது போன்ற அறிவுப்புகளைக் காணலாம்....
இனி, தமிழ் தமிழரால் மெல்லச் சாகுமோ ?
...
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !
விரைவில் தமிழ் நாட்டிலும் இது போன்ற அறிவுப்புகளைக் காணலாம்....
இனி, தமிழ் தமிழரால் மெல்லச் சாகுமோ ?
...
Posted by
RBGR
at
6:11:00 PM
0
comments
Labels: தமிழ்

காவல் துறைக்கு வாழ்த்துகள் !
அமைதிப் பூங்கா தமிழகம் - ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான திறமை வாய்ந்தவர்கள் தமிழக காவல் துறையினர்.
தமிழக காவல் துறை நடுநிலையோடு தான் இயங்குகிறதா அல்லது அதனை ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் இயக்குகிறார்களா என்ற கேள்வி நடுநிலைவாதிகளிடையே நிலவுகிறது.
சென்னையில் மாநகர போலீஸ் மாநகர், புறநகர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதன்மூலம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும் என காரணம் கூறப்பட்டது. ஆனால், காவல் ஆணையரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் சென்னையில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறையவில்லை.
ஒரு பதவிக்கு இடமாற்றம் செய்யப்படும் போலீஸ் அதிகாரி அந்த இடத்தை, அங்கு பணி புரியும் சக போலீஸ் அதிகாரிகள், அந்தப் பகுதியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை புரிந்துக் கொள்வதற்குள் அவர் வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்.
நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் இருந்த கூலிப்படைகளின் செயல்பாடுகள் தற்போது வேலூர் வரை வந்துவிட்டன. இதனால், கொலை, கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை ரூ. 10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால், குடிப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. குடிப்பழக்கம் அதிகரித்ததே குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
சமூக விரோதிகளை ஒழித்துக்கட்டும் அதிகாரத்தைக் காவல் துறை அதிகாரிகள் தம் கைகளில் எடுத்துக் கொள்வதை வரவேற்கும் மனோபாவம் சினிமா முதலான வெகுஜன ஊடகங்களாலும் சில அரசியல் இயக்கங்களாலும் கட்டமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
என்கவுன்டர்கள் காவல் துறை அதிகாரிகளின் சாகசங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. குற்றவாளிகளைச் சட்டத்தின் வழியில் தண்டிக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மீதான அவநம்பிக்கை பல்வேறு வழிகளில் உருவாக்கப்படுகிறது. நாட்டின் பல காவல் துறை அதிகாரிகளுக்கு என்கவுன்டர்களின் மீது ஒருவித போதை உருவாகியிருக்கிறது.
Posted by
RBGR
at
4:42:00 PM
1 comments
சில சமயம் சிலவற்றை பார்க்கும் போது சில மணித் துளிகள் பேச முடியாமல் போகும்.
Posted by
RBGR
at
11:34:00 AM
0
comments
Labels: மனம் தொட்டவை
"பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்கள் மிகவும் பிற்படுத் தப்பட் டோர் பட்டியலுக்கும், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் பட்டியலுக்கும் மாற்றக் கோரி வருகின்றனர். அனைத்து கோரிக்கைகளையும் ஏற் றால், ஓ.சி., - பி.சி., பட்டியலே இல்லாமல் போய்விடும்,'' என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் துறைகளுக்கான மானியக் கோரிக் கை மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் அளித்த பதில்:தமிழக அரசியலில் ஒவ்வெரு ஜாதிக்கும், மதத்துக்கும் கட்சிகள் துவக்கப்பட் டுள்ளன. ஆனால், அனைத்து சமுதாயத்தினருக்கும் பாடுபடும் தலைவராக கருணாநிதி உள்ளார்.
தற்போது, போகிற போக்கில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியில் உள்ள அனைவரும் ஆதிதிராவிடர் பட்டியலுக்கு மாற்றக் கோருகின்றனர். இதேபோல, இதர வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர். பிற்படுத்தப்பட் டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோராக மாற்றக் கோருகின்றனர்.
இதை செயல்படுத்தினால், மொத்தமும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் பட்டியல் தான் இருக்குமே தவிர, ஓ.சி., - பி.சி., இருக்காது. எந்த நேரத்தில் எப்படி செய்வது என்பதை முதல்வர் அறிந்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இதே முறையை பின்பற்றி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் முயன்றால் சாதி ஒழிக்கப்படும் என்பதினை மிகத்தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இதனை உலக அளவில் கொண்டு சென்றால் ஒன்றே மதம் என்றாகி விடும் என்பதினை சொல்வதில் மேலும் பெருமை அடைகிறேன் !
நல்ல வேளை! அமைச்சர் இதெல்லாம் சொல்லலை!
எப்பூடி!!!!!!!!!!
நன்றி : தினமலர்
Posted by
RBGR
at
6:50:00 PM
3
comments
Labels: நகைச்சுவை
என் இனிய வலைப்பதிவு மக்களே!
இது வரை மொக்கைப் பதிவுகளை மட்டுமே அறிந்து வந்திருந்த நான் முதன் முதலில் சில மொக்கை பதிவர்களினைப் பார்த்து வந்திருக்கின்றேன்.
இது வரை தேன்கூட்டோடும், தமிழ்மணத்தோடும் , பின்னூட்டங்களிலும் மட்டுமே ரசித்து வந்த சில நல் உள்ளங்களினை அருகில் ரசித்ததினை உங்களோடு பகிரவந்திருக்கின்றேன்.
கடந்த சில வாரங்களாக மிகச்சிரமமாய் அமைந்து போன வேலைப் பளுவினால் பதிவர் பட்டறையைப் பற்றி வலையில் கூடப் பார்க்கயியலாதிருந்த போது, பொன்ஸ் மற்றும் வீதபீபிள் ஆகியோர் "உங்கள் பங்கு என்ன?" என்று கேட்டவுடன் 2 மணி நேரம் நான் பேசத் தயார் எனக்கூற "உங்கள் ஆக்கத்தினை சிறுகுறிப்பு வரைக!" என்றார்கள். வரைந்தும் தந்து விட்டேன்.
பின்பு நடந்தவற்றினை நகைச்சுவையாக சொல்ல விரும்பவில்லை! அவ்வாறே சிலது நடந்திருந்தாலும்?!
காலையில் வீதபீபிள் உடன் சென்று வளாகத்தில் நுழைந்தேன். கண்ணில் பட்டவை சிலர் மட்டுமே! சரி தான் ! இன்னுமோர் பதிவர் சந்திப்பு தான் இது என்று ஒரு சிரிப்புடன் உள்ளே நுழைய, பல ஆச்சர்யங்களினை தன்னுள் வைத்திருந்த பட்டறை முகப்பு என்னை வரவேற்றது.
முதலில் பட்டவர் அருள். ஒரு வணக்கத்தினை கூறிவிட்டுத் திரும்பினால் நம்ம தல பாலபாரதி ( அவரும் எல்லோரையும் அப்படித்தான் கூப்பிடுகிறார்.) சிரிப்பு நிறைந்த முகத்துடன் வரவேற்றார்.
பின்பு கண்ணில் பட்டவர் மா.சிவக்குமார், பொன்ஸ் போன்றவர்கள்.
"போய் பதிவிட்டுக்கொள்ளுங்க! உங்க பெயரை!" என்றார்கள்.
"பதிவருக்கே பதிவா! "என்று சிரித்தவாறே கிடைத்த அடையாள அட்டையை என் பெயரிட்டு , பதிவு முகவரியிட்டு இதயத்தினருகே இட்டுக்கொண்டேன்.
ஒரு உண்டியலை வைத்து லக்கிலுக்கிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.அருகே போனேன்.
"நிதி வசூலிக்க வேண்டும். இதில் என்ன எழுதி வைப்பது ? "என்றதும், சட்டென்று பேனாவை எடுத்து பதிவர் பட்டறை வளர்ச்சி நிதி என்று அழகாய் எழுதினார்.
அருகே உடனே ஒரு உடனடிப் பின்னூட்டம் " சரி தான் ! சரியான ஆளிடம் தான் கேட்டீங்க! " என்று.
இப்படி சிரிப்புடன் தான் ஆரம்பித்தது.
சில நிமிடங்களில் தேனீக்கள் போல் பல தல மற்றும் தலைகள் வர களை கட்ட ஆரம்பித்தது.
இப்படி எழுதினால் நிறைய பேருக்கு தூக்கம்/கோபம்/எரிச்சல் வந்திடும். எனவே, குறிப்புகளாய் சிலவற்றினை மட்டும் வரைய விரும்புகின்றேன்.
எனது முதல் பாராட்டும் வாழ்த்தும் பாலபாரதிக்கும் தான்.
எந்த ஒரு அமைப்பிற்கும் ஒரு அமைப்பாளர் அல்லது செயல்வீரர் வேண்டும்.
ஆயிரம் பேர் கனவு காணாலாம்! நனவு படுத்த முயன்றவருள் முதன்மையாய் அவர் தான் எனக்குக் தோன்றினார். வாழ்த்துகள் தல!!
பின்பு பாரட்ட விரும்புவது 'ஜெயா' என்பவரினைப் பற்றி,
எனக்கெல்லாம் இன்றும் யாரையாவது முதலில் பார்க்கும் போது அதிகப்பட்சம் கைகுலுக்கி புன்னகைக்க மட்டுமே முடியும்!? ஆனால், அவர் 10 வருடங்கள் பழகிய நண்பரினை போல் ஒரு உரிமையுடன் வேலைகளினை பகிர்ந்தும் தன் பொறுப்பிலிட்ட பாங்கும் பின்னர் ஓடி ஓடி அவர் உழைத்த விதமும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த தோழி வளமாய் வாழ மனதில் வாழ்த்தி நகர்ந்தேன்.
வினையூக்கி அவர் பங்கெடுப்பும் அபாரம்.
பின்னர், "நான் கேட்ட தலைப்பில் (அதாவது நான் தந்த தலைப்பில்) எப்போது பேசலாம்!? "என்று பொன்ஸிடம் கேட்டேன்.
"நீங்க எப்படி பதிவை உருவாக்குவது என்று வகுப்பெடுக்க போறீங்க!" என்று அவர் சொன்னார்.
நான் கொடுத்த தலைப்பிற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமேயில்லை.
முதலில் தலை சுற்றியது. பின்னர் சமாளித்து நான் எடுத்த வகுப்பிற்கு வந்து அமர்ந்த, நின்ற, சன்னலோரம் எட்டிப் பார்த்த நண்பர்களினைப் பார்த்து எனக்கு உற்சாகம் கரைமீறி ஓடியது.
" இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ! விடாதே இவ்வாய்ப்பை !!"என்று உள்ளே ஒன்று கூவியது!
வகுப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் மனநிலையில் இருந்தார்கள். அவர்களினை ஒருமுகப்படுத்த எனக்கு கிடைத்த வழி அவர்களையே பேச வைப்பது என்ற ஆதிகால தொழில் நுட்பம் தான்.
நானே ஒருவரை கூப்பிட்டு " உங்களுக்கு எது பிடிக்குமோ!! அதைப்பற்றி 5 நிமிடம் பேசுங்களேன்! நாங்கள் கேட்கிறோம்?!!" என்றேன். சிலர் சிலையானர்கள்.
ஒரு முதியவர் (வயதான இளையவர்) முன் வந்து "இன்றைய சமூகம்! என் தலைப்பு!!" என்றார்.
சரிதான் ! பேசுங்க ! என்றதும் 10 நிமிடமாயும் பேசிகொண்டிருந்தார். நானும் தடுக்காது பேச விட்டு, பின்னர் " நண்பர்களே! இவர் இப்போது இந்த அறையில் பேசியதை ஒரு இணைய தொழில்நுட்பம் மூலமாய் உலகறியச் செய்வது எப்படி என்பதினை பேசத்தான் நான் வந்துள்ளேன்! என்று சொன்னதும் அனைத்துப் பேச்சுகளும் அடங்கி என்னை நோக்கி அமர்ந்தனர் அனைவரும்.
இருந்தாலும் ஒரு கணித்திரைபின்பிருந்து மட்டும் இருவர் பேசும் சத்தம் கேட்டது.
வழக்கமான ஆசிரியருக்கே உரித்தான கோபத்துடன் " யாருங்க அது! எங்கிட்டயே பேசுங்க! நான் சொல்லித்தரேன்! " என்றேன்.
வகுப்பா!? எனக்கேவா?? என்பது மாதிரி கணித்திரையின் பின்பிருந்து எட்டிப்பார்த்த முகம் பார்த்து அரண்டு போனேன்.
அது நம் "டோண்டு" அவர்கள்.
அவர் வருத்தம் தெரிவிக்க நான் வழிய பின்னர் வகுப்பை துவங்கினேன்.
பின்னர் நல்முறையில் நான் விளக்கியதாக நண்பர்கள் சொன்னார்கள்.
நிறைய பதிய ஆசைதான்! உங்களுக்கும் படிக்க நேரமில்லை என்பதால் விட்டு விடுகின்றேன்.
பின்னர் நடந்த பலவற்றை பலர் பலவாறு ஏற்கனவே பதிந்திருந்தார்கள்.
நான் வியந்தவை பல வருந்தியவை சில.
வருந்தியவற்றுள் முக்கியமானது கீழ்தளத்தில் நட்ந்த போர். அதைப் பற்றி எழுத விரும்பவில்லை.
நண்பர்களே! எத்தனையோ துறைகளில் எத்தனையோ சாதனைகளினை நாம் படைத்தும் நிகழ்த்தியும் கொண்டிருக்கின்ற நாம், ஏன் பதிகிறோம் என்ற கேள்வியைக் கேட்டால், நிச்சயமாக ஒரு 100 பதிலாவது வரும்.
நான் ஏன் பதிகின்றேன் அல்லது பதியத் துவங்கினேன் என்று என்னைக் கேட்டபோது எப்போதும் வந்த பதில் "தமிழ் நீண்டகாலம் வாழ இது ஒரு தலையாய பணி!" என்பதுதான்.
நோக்கம் பலதாய் இருப்பினும் இப்பதிவர் பட்டறையின் ஆழமான விருப்பமும் அதுவாய் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
ஆனால், போகும் பாதையில் வழி மாறலாம்! ஆனால், போய் சேருமிடம் எதுவென்பெதில் தெளிவு வேண்டும்.
நான் விரும்பிய வண்ணம் ஒரு பங்களிப்பு தர எனக்கு உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றியுடனும், யாரேனும் ஒரு நல் பதிவர் என்னால் உருவாகியிருப்பார் என்ற நம்பிக்கையுடனும் முடிக்கின்றேன்.
வாழ்க! வளமுடன்!
Posted by
RBGR
at
5:26:00 PM
7
comments
Posted by
RBGR
at
3:38:00 PM
1 comments
Labels: புகைப்படம்/ஓவியம், பொதுவான பதிவு
கம்னீயூசம்-மார்க்கிசம்
அறிந்தவை:
ஏழை மற்றும் தொழிலாள வர்க்க மக்களுக்காக போராடும் ஒரு அமைப்பின் சாரத்தில் வந்த அமைப்புகள். நேரடி மற்றும் மறைமுக தாக்குதல் நடத்தி எப்பாடுபட்டாவது மக்கள் நலன் பேணுவது.
அறியாதவை:
ஆட்சி என்று வரும் போது விவசாயிகளை ஏழைகளின் வயிற்றில் வாழ்வாதாரத்தில் அடிப்பது. பேருக்கு ஒரு போராட்டம், ஒரு அறிக்கை விட்டால் மக்கள் சமாதானமாகி விடுவார்கள் என்ற அதிமேதாவித்தனத்துடன் 'நல்லவன்; மாதிரியே நடிப்பது.
திராவிடக் கட்சிகள்:
அறிந்தவை:
தமிழை வாழ வைக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு அதிலிருந்து பிரிந்த சில பிரிவுகள் என இன்று அடையாளம் காணப்பட்டாலும், ஆரம்பத்தில் சமுதாய எழுச்சி மிகு போராட்டங்களும், மக்களுக்காக உழைத்த அருந்தலைவர்களையும் கொண்ட , தன் வாரிசு என்பது தனது கொள்கைகளினை கொண்டு செலுத்துபவர் மட்டும் தான் என்று நினைத்து அதனை நடைமுறைப்படுத்தியவர் தம் அமைப்புகள்.
அறியாதவை:
தன் குடும்பம்,தோழியின் குடும்பம், மகன் , மகள், மருமகன், பேரன், மனைவி, துணைவி, உடன்பிறவா தோழி,வளர்ப்பு மகன்,சம்பந்தி என்றெல்லாம் உறவுகளினை அறிமுகப்படுத்தி மன்னர்முறையினை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கும் பாங்கு.
போலீஸ்காரர்:
(காவல்காரர் என்ற உண்மையான பதத்தினை மற்ந்து போய் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத ஒரு அமைப்பு )
அறிந்தவை:
மக்களைப் பாதுகாக்க, சட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட காவல்காரர்களின் அமைப்பு.
அறியாதவை:
ஆரம்பநிலை காவலர் முதல் முதன்மை நிலை அதிகாரி வரை அனைவரும் கையூட்டு வாங்க, கொஞ்சமும் கூச்சப்பட மறக்கச் செய்ய காரணம் அவர்களா! இல்லை அரசியல்வாதிகளா! இல்லை நாமா!
இப்படி ஏராளமாய் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த 'அறிந்தும் அறியாதவை களை' பின்னூட்டமிடுவீர்களா!
நல்லவை பிரசுரிக்கப்படும்.
Posted by
RBGR
at
12:37:00 PM
1 comments
"காதலி,சாதிகள் சாம்பலாக
என்னைக் காதலி!"
"கடைவிழி கடைவீதியில் நிறுத்தியது!?"
"அமுத விஷங்கள் உருவானது ஒரிடமே!
நம்பவிலலை நான்! உன்னை பிரியும்வரை!!"
"காதலில் மட்டும் தான், மீன்கள் வலைவீச
புலிகள் மாட்டிக்கொள்கின்றன!?"
"ஆண் பெண்ணாவதும்,
பெண் ஆணாவதும் கம்னியூசமில்லை!
அது காதலிசம்!!"
"தேன் உறிஞ்ச வந்த வண்டை மலர் காதலனென்றாய்!
ஊர் கண்டு மிரண்ட என் கண்களை மானென்றாய்!
நேற்று வாங்கிய பொய்முடியை மயிலிறகென்றாய்!
பாவாடை தடுக்க நடந்த என்னை அன்னமென்றாய்!
மனம் தாவி வேறு மணம்புரிந்தால் என்னை குரங்கென்பாயோ!"
இதன் தெரிந்தெடுத்தலுக்கான கடைசித் தேதி "இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10." என்று அப்பதிவில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனது இப்பதிவை ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானமாகத்தான் கொள்கின்றேன்.
Posted by
RBGR
at
6:31:00 PM
6
comments
Labels: பொதுவான பதிவு



[ தலைவர் பார்த்தாலே அது 'ப்ஞ்ச்' தான்!]
படங்கள் உதவி:
flicker எனும் இணைய தளம்.
தலைவர் நடிச்சா படம் ஹிட ! தலைவர் மேட்டரப் போட்டா பதிவு ஹிட் !!
இது எப்படி இருக்கு!
பின் குறிப்பு :
குத்து வசனம் = பஞ்ச் டயாலாக் என்று கொள்ளவும்.
'ஹிட்' டயலாக் உதவி: லக்கிலுக்கார்! அவர்களின் சிவாஜி கிளைமேக்ஸ் - இணையத்தில்!!!
அப்பாடி ! எப்படியோ ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவைப் போட்டாச்சு!
கடைசியாக வந்த செய்தி:
புத்தம் புதிய தோற்றத்தில் தலைவர்:
Posted by
RBGR
at
2:37:00 PM
4
comments
தலை காய்ந்து, மூளை( இருப்பவர்க்கு) வேகும் வெயிலோடு விளையாட முடியாது, ஊட்டி போன்ற விடுமுறை தலங்களுக்கு 2 நாள் சென்று மாதம் முழுதும் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தில் துண்டு விழ, மனைவி, குழந்தைகளை மனைவியின் தாய் வீடு அனுப்ப முடியாது போய், நண்பர் ' என் பொண்டாட்டி ஊருக்குப் போயாச்ச்ச்சேய்ய்ய்! " என்று சொல்லக் கேட்டு கடுப்பாகி, விடுமுறைகால சிறப்பு வகுப்புகள் என புதிய செலவில் விழி பிதுங்கி.....
இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கின்றேன்.
இப்படியாக படுகடுப்பிலிருக்கும் நண்பர்களே!
உங்கள் குழந்தைகளுடன் கொஞ்சம் நேரம் செலவிடுங்களேன்( துண்டெல்லாம் விழாமல் தான்)
எனது நண்பரின் நண்பர் ஒருவர் கேட்டார்.
"என் சன்னை கம்யூட்டர் கிளாஸில் சேர்த்தலாமென்றிருக்கின்றேன்! உங்கள் சஜக்சென் சொல்லுங்க! எதுங்க பெஸ்ட் அண்ட் சீப் !??"
( இப்போதெல்லாம் தமிழ் தலைவர்களே டீப் ஸிலீப்லிருக்கும் போது, இது போன்ற தமிழ், தமிழரிடையே இருப்பது ஒன்றும் வியப்பல்ல என்பது தனிக்கதை!!)
நமது குழந்தைகளுக்கு இப்போது தேவை ஓய்வும், நல்ல விளையாட்டுகளும் தான்.
அவ்விளையாட்டுகளும் அறிவு சார்ந்ததாகவும் பொழுது போக்கவுமாக இருந்து விட்டால், எவ்வளவு அருமையாக இருக்கும்.
இது பற்றி பேசினால் நீண்டு விடும்.
எனவே, என்னாலியன்ற ஒரு யோசனை! (ஒரு நினைவுபடுத்துதல் மட்டுமே!)
வெறும் விரல்கள் மட்டும் வைத்து விளையாடி மகிழலாம்.
இதற்கு முந்தைய இப்பதிவை பார்க்கவும்( ஆட்டோகிராப்!- பாகம்-1.)
இதுவும் ஒரு கைவிளக்கை சிறு இருட்டறைவில் வைத்து மகிழும் ஒரு சிறு விளையாட்டு.
சிறு பயிற்சியின் மூலம் நீங்கள் வித்தைக் காட்டலாம்!
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான இடைவெளி இன்னும் குறையும்.
அவர்களின் உருவாக்கத் திறனும் அதிகரிக்கும் !
இப்போதைக்கு,நம் மீது படையெடுத்துள்ள அயல்நாட்டு நிறுவனங்களுக்கு நம் வேலை செய்யும் அறிவு மட்டுமே தேவை. நமது படைப்புத் திறன் மெதுவாய் அழிந்து கொண்டே வருகின்றது.
இது போன்றவை அவற்றை வளர்க்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை !
வாழ்த்துகள்!!













Posted by
RBGR
at
1:15:00 PM
0
comments
Labels: செய்தியும் படமும், புகைப்படம்/ஓவியம்
தடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை என்ற முந்தைய அறிவிப்பிற்க்கு கிடைத்த உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.
வெற்றி பெற்ற பங்களிப்பு:
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..
சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)
காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
Posted by
RBGR
at
10:17:00 AM
0
comments
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!! என நடுவர்கள் சொல்லிவிட்டாலும், சிலவற்றை தெரிந்தெடுத்து உதவினார்கள்.
அவை உங்கள் பார்வைக்கு:
1.
We The People said...
காந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:
"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்!"
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.
2.
லக்கிலுக் said...
காந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...
சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே..
3.
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..
சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)
காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
4.
THOTTARAYASWAMY.A said...
அகிம்சை என்னுள் ஆறாக்காயமாய் அவமாணங்களையே பரிசளிக்கிறது.. சமுதாயம் வன்முறையையும் வக்கிரத்தையம் ஏவியே விடுகிறது..
இருந்தும் மெளனமய் என்னுள் அழுகின்றேன்..
என்னுள் கோட்சே பிறந்துவிடக்கூடாதுஎன்பதற்காக.
5.
Posted by
RBGR
at
3:37:00 PM
0
comments
'தென்னிந்திய குறும்பட படைப்பாளிகள் அமைப்பு'
Posted by
RBGR
at
10:52:00 AM
0
comments
போட்டிக்கான முடிவு தேதி:
10-04-2007.இந்திய நேரம் 12 மணி. நள்ளிரவு.
பின்னூட்டமாகவே போட்டியிடலாம் நண்பர்களே.
ஏற்கனவே கூறியது போல் பதிவாக்கியும் இங்கு இணைப்பு முகவரியைப் பின்னுட்டமிடலாம்.
இனி விவரங்கள்:
தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( !!??) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.
பரிசு:
ஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும். ( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)
போட்டி:
கீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்களும் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.
(பின்னூட்டங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்)
விதி முறைகள்:
1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.
2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.
3. நகைச்சுவையாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம். ஒருவரி கமெண்டும் வரவேற்கப் படுகிறது.
4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.
5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.
6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும்,பின்னுட்டங்களுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அவரையே சார்ந்தது.
7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.
9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.
முக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:
போட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...
நன்றி.
பதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தேதி : 10 -ஏப்ரல்,2007.
முடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
10. தேவைப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.
ஏற்கனவே, போட்டிக்கான விமர்ச்சனங்களும் பங்கெடுப்பும் இங்கு இடப்பட்டிறுக்கிறது.
13 comments:
✪சிந்தாநதி said...
போட்டிக்கு நன்றி.ஆனால்//தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( !!??) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா? ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா? ;(http://tamiltalk.blogspot.com/பரிசுப் போட்டி அஞ்சு போட்டி முடிஞ்சாச்சுங்க...
Tue Mar 27, 02:28:00 PM 2007
தமிழி said...
நன்றி. சிந்தா நதி.மன்னிக்க!இதனை கவனத்தில் கொள்ளவில்லை, இருந்தாலும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
Tue Mar 27, 02:32:00 PM 2007
தமிழி said...
மேலும்., பதிவர்களின் பதிவினை மென்மேலும் பலர் பார்க்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாக கருதுகின்றேன்.பதிவுலக நண்பர்களே எனது எண்ணத்தினை ஊக்கப்படுத்துவீர் என்றே விழைகின்றேன்.
Tue Mar 27, 02:40:00 PM 2007
sivagnanamji(#16342789) said...
//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா?
Tue Mar 27, 02:42:00 PM 2007
தமிழி said...
// sivagnanamji(#16342789) said...//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா? //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது !!வேண்டுமானால் அதிகரிக்கலாம்.கெளதமின் தடாலடியின் நாயகரான உங்கள் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.நன்றி.
Tue Mar 27, 03:58:00 PM 2007
We The People said...
காந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்!"சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.(பழக்க தோஷம்பா!)
Tue Mar 27, 04:11:00 PM 2007
லக்கிலுக் said...
நேதாஜி : தலைவரே உங்களோட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துலே என்னையும் சேத்துக்குங்களேன்காந்திஜி : யோவ் சுபாசு இது 1942 இல்லே. 2007. 65 வருஷமா நீ கோமாவுலே இருந்ததுனால எதுவும் தெரியலை போலிருக்கு. வெள்ளைக்காரன் கிட்டேருந்து நாட்டை மீட்டு கொள்ளைக்காரனுங்க கிட்டே கொடுத்து 60 வருஷமாச்சி. 59 வருஷத்துக்கு முன்னாடி என்னையும் போட்டுத் தள்ளிட்டானுங்க. நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டிடிச்சிப்பா....
Wed Mar 28, 11:33:00 AM 2007
லக்கிலுக் said...
காந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே...
Wed Mar 28, 11:35:00 AM 2007
தமிழி said...
போட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...நன்றி.
Wed Mar 28, 11:42:00 AM 2007
கிரிக்கெட்வெறியன். said...
இந்தியா அணி வெற்றி பெற உண்ணாவிரதம் இருக்கப்போறீங்களா!அய்யோ! அய்யோ! உங்களோட ஒரே தமாசுதான் போங்க!
Wed Mar 28, 02:33:00 PM 2007
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
Wed Mar 28, 04:42:00 PM 2007
Nakkeeran said...
சுபாஷ்: தூங்குடா பார்க்காதே பார்க்காதேன்னு சொன்ன கேட்டா தானே. இந்தியா - இலங்கை மேட்ச் பார்த்ததில் இருந்து இப்படி தான் (சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)காந்தி: ஹி ஹி
Thu Mar 29, 07:41:00 AM 2007
We The People said...
//(சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)//அவர் யார் என்று தெரியாத அளவுக்கு இந்தியர்கள் வாழும் நிலை வந்துவிட்டது!ஐயோ! ஐயோ!!
Sat Mar 31, 11:42:00 AM 2007
மேலும் சில விமர்சனங்கள் மட்டும் இங்கே:
Anonymous said...
நாளைக்கு பின்னூட்டம் போடுகிறேன்.- சென்னையிலிருந்து லக்கிலுக்
Tue Mar 27, 04:18:00 PM 2007
கும்மாங்கோ said...
காந்திஜி: இந்த கூவம் பக்கம் கூட்டம் போடாதீங்கன்னா கேக்க மாட்டேங்கறீளே ?நேதாஜி: ரொம்ப முக்கியம். இப்ப நாடு இருக்கிற நெலமையிலே கூவம் எவ்வளவோ தேவலை
Tue Mar 27, 05:39:00 PM 2007
ரவிசங்கர் said...
எட்டாவது விதி எதற்கு என்று புரிய வில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் தனியே எழுதப்படும் பதிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா என்ன? இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது? தொடர்ந்து இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தால் இந்த விதியைத் தளர்த்தலாம்
Tue Mar 27, 05:57:00 PM 2007
தமிழி said...
ரவிசங்கர், இன்றைய நிலைமையில் போலிகள் அதிகம் நடமாடுவதாக ஒவ்வொரு பதிவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.வரும் பதிவை போலியல்ல ??!! என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை! ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்தது!மேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவா! நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன்!கருத்துக்கு நன்றி ரவிசங்கர்.
Wed Mar 28, 10:01:00 AM 2007
தமிழி said...
கும்மாங்கோ! உங்கள் வலைப்பூ என்று ஒன்றிருந்தால் அதில் உங்கள் கற்பனையை பதிவாய் இட்டு, அவ்விடுகையின் முகவரியையை இங்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.நன்றி.
Wed Mar 28, 10:03:00 AM 2007
லக்கிலுக் said...
நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்!
Wed Mar 28, 12:07:00 PM 2007
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
Wed Mar 28, 04:18:00 PM 2007
THOTTARAYASWAMY.A said...
அகிம்சை என்னுள்ஆறாக்காயமாய்அவமாணங்களையேபரிசளிக்கிறது.. சமுதாயம்வன்முறையையும்வக்கிரத்தையம்ஏவியே விடுகிறது.. இருந்தும் மெளனமய்என்னுள் அழுகின்றேன்.. என்னுள் கோட்சே பிறந்துவிடக்கூடாதுஎன்பதற்காக..
Mon Apr 02, 09:19:00 PM 2007
Anonymous said...
என்னது நீங்க தான் அடுத்த கோச்சா!-சங்கரன்.
Thu Apr 05, 01:16:00 PM 2007
Posted by
RBGR
at
11:47:00 AM
3
comments
போட்டிக்கானப் பங்களிப்பு மிகக்குறைவாக இருப்பதால் இன்னும் ஒரு வாரம் நீட்டி வைக்கலாம் என்று நடுவர்கள் கருதுவதால், ஒரு சிறு மாற்றம் .
போட்டிக்கான முடிவு தேதி:
10-04-2007.இந்திய நேரம் 12 மணி. நள்ளிரவு.
பின்னூட்டமாகவே போட்டியிடலாம் நண்பர்களே. ஏற்கனவே கூறியது போல் பதிவாகாக்கியும் இங்கும் இணைப்பு முகவரியைப் பின்னுட்டமிடலாம்.
இனி விவரங்கள்:
தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( !!??) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.
பரிசு:
ஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம் ஒன்று அளிக்கப்படும். ( முடிந்தால் சென்னையில் எங்கு கிடைக்கும் அல்லது அப்புத்தகத்தை எப்படி பெறுவது என்பதனையும் குறிப்பிட்டால் எளிதாக இருக்கும்.)
போட்டி:
கீழே உள்ள காந்தியடிகளும், சுபாஷ் சந்திரப் போஸ் அவர்களும் இன்றைய இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தால், என்ன பேசி இருப்பார்கள் என்ற உங்கள் கற்பனையைப் பதிவாய் உங்கள் வலைப்பூவிலிட்டு, இணைப்பு முகவரியினை தயவு செய்து இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.
(பின்னூட்டங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்)
விதி முறைகள்:
1. குறைந்த பட்சம் இரு பதிவர்கள் ( என்னையின்றி) முடிவு செய்யும் கற்பனையே இறுதியானது.
2. மிகவும் வலிவான கருத்தாக இருக்கலாம். ஆனால், யாருக்கும் வலிக்காமல் சொன்னால் நலம்.
3. நகைச்சுவையாக இருக்கலாம். கவிதை ஏன் ஒரு கதையாகக் கூட இருக்கலாம். ஒருவரி கமெண்டும் வரவேற்கப் படுகிறது.
4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பளிக்கலாம்.
5. தனிப்பட்ட மனித தாக்குதல்கள் பரிசை எதிர்பார்க்க வேண்டாம்.
6. பங்கெடுக்கும் அனைத்துப் பதிவுகளுக்கும்,பின்னுட்டங்களுக்கும் பதிவரே பொறுப்பு மற்றும் உரிமையும் அவரையே சார்ந்தது.
7. பரிசு இந்தியாவில் பதிவர் குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
8. அனானிகள் என்ற நண்பர்கள் இதற்கேனும் ஒரு வலைப்பதிவைத் துவங்குகளேன். ஆனால், தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற பதிவுத் திரட்டிகளின் பங்கெடுத்துள்ள பதிவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.
9. போட்டி துவங்கும் நேரம் : இக் கணம் முதல்.
முக்கிய மாற்றம் மற்றும் அறிவிப்பு:
போட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...
நன்றி.
பதிவுகளினை அல்லது கற்பனைகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடக் கடைசித் தேதி : 10 -ஏப்ரல்,2007.
முடிவுகள் : அதிகப் பட்சம் கடைசி தேதிக்குப் பின் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
10. தேவைப் பட்டால் விதிமுறைகள் கடைசி நேர மாறுதல்களுக்கும் உட்பட்டது.
ஏற்கனவே, போட்டிக்கான விமர்ச்சனங்களும் பங்கெடுப்பும் இங்கு இடப்பட்டிறுக்கிறது.
13 comments:
✪சிந்தாநதி said...
போட்டிக்கு நன்றி.ஆனால்//தடாலடி கெளதம் அவர்களினைத் தொடர்ந்து யாராவது தடாலடிப் போட்டிகள் நடத்துவார்கள் என காத்திருந்துப் பார்த்து ( !!??) ஒரு தடாலடிப் போட்டியை அறிவிக்க முடிவு செய்து இப்பதிவிட்டுள்ளேன்.//இப்படி சொல்லியிருக்கீங்க...;) நீங்க தமிழ்மணத்தில் ஒழுங்கா படிக்கிறதில்லயா? ஏங்க..இதுக்குன்னே ஒரு தளம் தொடங்கி அஞ்சாறு வாரமா போட்டி நடத்திக்கிட்டு இருக்கோமே நீங்க பார்க்கவே இல்லையா? ;(http://tamiltalk.blogspot.com/பரிசுப் போட்டி அஞ்சு போட்டி முடிஞ்சாச்சுங்க...
Tue Mar 27, 02:28:00 PM 2007
தமிழி said...
நன்றி. சிந்தா நதி.மன்னிக்க!இதனை கவனத்தில் கொள்ளவில்லை, இருந்தாலும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
Tue Mar 27, 02:32:00 PM 2007
தமிழி said...
மேலும்., பதிவர்களின் பதிவினை மென்மேலும் பலர் பார்க்க வேண்டும் என்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாக கருதுகின்றேன்.பதிவுலக நண்பர்களே எனது எண்ணத்தினை ஊக்கப்படுத்துவீர் என்றே விழைகின்றேன்.
Tue Mar 27, 02:40:00 PM 2007
sivagnanamji(#16342789) said...
//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா?
Tue Mar 27, 02:42:00 PM 2007
தமிழி said...
// sivagnanamji(#16342789) said...//கடைசிநேர மாறுதல்களுக்கு உட்பட்டது//பரிசுத் தொகையுமா? //நிச்சயமாக பரிசுத் தொகை குறையாது !!வேண்டுமானால் அதிகரிக்கலாம்.கெளதமின் தடாலடியின் நாயகரான உங்கள் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.நன்றி.
Tue Mar 27, 03:58:00 PM 2007
We The People said...
காந்தி நேதாஜியை பார்த்து சொல்வது போல:"அப்பவே உங்களை காங்கிரஸ் தலைவரா இருக்க விட்டு இருந்தா இன்னைக்கு இந்தியா சுப்பர் பவரா எப்பவோ மாறியிருக்கும்!"சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.(பழக்க தோஷம்பா!)
Tue Mar 27, 04:11:00 PM 2007
லக்கிலுக் said...
நேதாஜி : தலைவரே உங்களோட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துலே என்னையும் சேத்துக்குங்களேன்காந்திஜி : யோவ் சுபாசு இது 1942 இல்லே. 2007. 65 வருஷமா நீ கோமாவுலே இருந்ததுனால எதுவும் தெரியலை போலிருக்கு. வெள்ளைக்காரன் கிட்டேருந்து நாட்டை மீட்டு கொள்ளைக்காரனுங்க கிட்டே கொடுத்து 60 வருஷமாச்சி. 59 வருஷத்துக்கு முன்னாடி என்னையும் போட்டுத் தள்ளிட்டானுங்க. நாடு எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டிடிச்சிப்பா....
Wed Mar 28, 11:33:00 AM 2007
லக்கிலுக் said...
காந்திஜி : என் புள்ள தேவதாஸ் எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில பதிவு பண்ணி 73 வருஷம் ஆவுது. இன்னும் வேலை கெடைக்கல...சுபாஷ் : தலைவரே. நம்ம லாலுகிட்டே ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா ரெயில்வேயில ஒரு வேலை போட்டு கொடுத்துடுவாரு இல்லே...
Wed Mar 28, 11:35:00 AM 2007
தமிழி said...
போட்டிக்கான பங்களிப்பு ,பின்னூட்டாமாகவும் இருக்கலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டதால், நண்பர்களே,பின்னூட்டத்திலும் தொடரலாம் உங்கள் கற்பனையை...நன்றி.
Wed Mar 28, 11:42:00 AM 2007
கிரிக்கெட்வெறியன். said...
இந்தியா அணி வெற்றி பெற உண்ணாவிரதம் இருக்கப்போறீங்களா!அய்யோ! அய்யோ! உங்களோட ஒரே தமாசுதான் போங்க!
Wed Mar 28, 02:33:00 PM 2007
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
Wed Mar 28, 04:42:00 PM 2007
Nakkeeran said...
சுபாஷ்: தூங்குடா பார்க்காதே பார்க்காதேன்னு சொன்ன கேட்டா தானே. இந்தியா - இலங்கை மேட்ச் பார்த்ததில் இருந்து இப்படி தான் (சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)காந்தி: ஹி ஹி
Thu Mar 29, 07:41:00 AM 2007
We The People said...
//(சுபாஷ்-க்கு பின்னால் இருப்பவரை பார்க்கவும்)//அவர் யார் என்று தெரியாத அளவுக்கு இந்தியர்கள் வாழும் நிலை வந்துவிட்டது!ஐயோ! ஐயோ!!
Sat Mar 31, 11:42:00 AM 2007
மேலும் சில விமர்சனங்கள் மட்டும் இங்கே:
Anonymous said...
நாளைக்கு பின்னூட்டம் போடுகிறேன்.- சென்னையிலிருந்து லக்கிலுக்
Tue Mar 27, 04:18:00 PM 2007
கும்மாங்கோ said...
காந்திஜி: இந்த கூவம் பக்கம் கூட்டம் போடாதீங்கன்னா கேக்க மாட்டேங்கறீளே ?நேதாஜி: ரொம்ப முக்கியம். இப்ப நாடு இருக்கிற நெலமையிலே கூவம் எவ்வளவோ தேவலை
Tue Mar 27, 05:39:00 PM 2007
ரவிசங்கர் said...
எட்டாவது விதி எதற்கு என்று புரிய வில்லை. திரட்டிகளில் இணைக்கப்படாமல் தனியே எழுதப்படும் பதிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா என்ன? இல்லை, உங்கள் அறிவிப்பைப் பார்த்து புதிதாக ஒருவர் பதிவு தொடங்கினாலும் உடனடியாக அதை எப்படி திரட்டிகளில் இணைப்பது? தொடர்ந்து இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தால் இந்த விதியைத் தளர்த்தலாம்
Tue Mar 27, 05:57:00 PM 2007
தமிழி said...
ரவிசங்கர், இன்றைய நிலைமையில் போலிகள் அதிகம் நடமாடுவதாக ஒவ்வொரு பதிவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.வரும் பதிவை போலியல்ல ??!! என்பதினை அறிய என்னிடம் தொழில் நுட்பமோ,சிறப்பு வசதிகளோ இல்லை! ஆகவே தான், ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரட்டியில் அனுமதிக்கப் பட்ட பதிவர் என்று சொல்ல வேண்டி இருந்தது!மேலும்., இதன் மூலம் அப்பதிவர் (இப்போதைய) வெகுசன ஊடகமாய் திகழும் இத்திரட்டிகளின் வட்டத்திற்கும் நம் போன்றோர் பார்வைக்கும் வருவார்கள் அல்லவா! நிறைய பதிவர்களையும் அதற்கு தேவையான பார்வையாளார்களினையும் என்ன்னாலியன்ற வகையில் ஊக்கப் படுத்தவே இவ்வாய்ப்பை கருதுகின்றேன்!கருத்துக்கு நன்றி ரவிசங்கர்.
Wed Mar 28, 10:01:00 AM 2007
தமிழி said...
கும்மாங்கோ! உங்கள் வலைப்பூ என்று ஒன்றிருந்தால் அதில் உங்கள் கற்பனையை பதிவாய் இட்டு, அவ்விடுகையின் முகவரியையை இங்குப் பின்னூட்டமாகப் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்.நன்றி.
Wed Mar 28, 10:03:00 AM 2007
லக்கிலுக் said...
நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்!
Wed Mar 28, 12:07:00 PM 2007
கவிதா said...
காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)
Wed Mar 28, 04:18:00 PM 2007
Posted by
RBGR
at
7:32:00 PM
2
comments
O.T.I. செய்தி:
சென்று திரும்புகின்ற நமது விளம்பர நடிகத் திலகங்கள் புதிய படங்களில் ஒப்பந்தமானார்கள்.
அவர்கள் நடிப்புத் திறன் பற்றி தயாரிப்பாளர் அஸ்கிபுஸ்கி கூறுகையில்,
"அவர்களின் விளம்பரப் படங்களினைப் பார்த்துள்ள நான் ஏற்கனவே ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன்.( அப்போது எடுத்த மேக்கப் டெஸ்ட் தான் கீழ்க் கண்ட LA..AGAIN புகைப்படம்.)
"ஆனால், உலகப்போட்டிகளில் அவர்களின் நடிப்பு என்னை உருக்கி விட்டது. மிகச்சுலபமான பந்தாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அவுட்டான விதமும் ( இந்த இடத்தில் அஸ்கி கண்ணீர் விட்டு அழுதார்), மேலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அடிக்காமல் விட்ட அவ்வீரமிகு மைந்தர்களின் நடிப்புத் திறன் உலக சினிமா வரலாற்றில் பதிக்க வேண்டிய ஒன்று " என்று கூறினார்.
அப்போது அவர் வெளியிட்ட சில படங்களின் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு!!




மேலும், அமெரிக்காவில் இருந்து ஸரோஜ் நாயுடு சாமி அனுப்பிய ஒரு செய்தி:
புதிய நடிகர்களினைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரியண்ணணும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமா(க்)கியுள்ளாராம்.
அவசரச் செய்தி:
அதிரடி நாயகர்கள் இணந்து மிரட்டும் ஒரு சரித்திரபடமும் ஒப்பந்தமாகியுள்ளதாக ஏஜென்சி செய்திகள் சொல்லுகின்றன.
இனி இன்றைய கிசு கிசு:
கொதிப்படைந்த லொல்லு அவர்கள் நான் அவர்களை விட நன்றாக நடிப்பேன் என்று மேக்கப் போட்டுக்கொண்டதாக சில புகைப்படங்களை இன்று ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.


Posted by
RBGR
at
10:53:00 AM
2
comments
Labels: புகைப்படம்/ஓவியம்
நேதாஜி: உங்களோட Lage Raho Munnabhai படம் பார்த்தேன். கலக்கிருந்தீங்க!
காந்திஜி: அட போப்பா, என்னைய கேவலமா காப்பி அடிச்சதுக்கு அந்த டைரக்டர் மேல எப்படி கேஸ் போடறதுன்னு நானே யோசிச்சுண்டு இருக்கேன்!!