"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !
Monday, July 09, 2007
Wednesday, May 09, 2007
ஆட்டோகிராப்! - பாகம் -2
தலை காய்ந்து, மூளை( இருப்பவர்க்கு) வேகும் வெயிலோடு விளையாட முடியாது, ஊட்டி போன்ற விடுமுறை தலங்களுக்கு 2 நாள் சென்று மாதம் முழுதும் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தில் துண்டு விழ, மனைவி, குழந்தைகளை மனைவியின் தாய் வீடு அனுப்ப முடியாது போய், நண்பர் ' என் பொண்டாட்டி ஊருக்குப் போயாச்ச்ச்சேய்ய்ய்! " என்று சொல்லக் கேட்டு கடுப்பாகி, விடுமுறைகால சிறப்பு வகுப்புகள் என புதிய செலவில் விழி பிதுங்கி.....
இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கின்றேன்.
இப்படியாக படுகடுப்பிலிருக்கும் நண்பர்களே!
உங்கள் குழந்தைகளுடன் கொஞ்சம் நேரம் செலவிடுங்களேன்( துண்டெல்லாம் விழாமல் தான்)
எனது நண்பரின் நண்பர் ஒருவர் கேட்டார்.
"என் சன்னை கம்யூட்டர் கிளாஸில் சேர்த்தலாமென்றிருக்கின்றேன்! உங்கள் சஜக்சென் சொல்லுங்க! எதுங்க பெஸ்ட் அண்ட் சீப் !??"
( இப்போதெல்லாம் தமிழ் தலைவர்களே டீப் ஸிலீப்லிருக்கும் போது, இது போன்ற தமிழ், தமிழரிடையே இருப்பது ஒன்றும் வியப்பல்ல என்பது தனிக்கதை!!)
நமது குழந்தைகளுக்கு இப்போது தேவை ஓய்வும், நல்ல விளையாட்டுகளும் தான்.
அவ்விளையாட்டுகளும் அறிவு சார்ந்ததாகவும் பொழுது போக்கவுமாக இருந்து விட்டால், எவ்வளவு அருமையாக இருக்கும்.
இது பற்றி பேசினால் நீண்டு விடும்.
எனவே, என்னாலியன்ற ஒரு யோசனை! (ஒரு நினைவுபடுத்துதல் மட்டுமே!)
வெறும் விரல்கள் மட்டும் வைத்து விளையாடி மகிழலாம்.
இதற்கு முந்தைய இப்பதிவை பார்க்கவும்( ஆட்டோகிராப்!- பாகம்-1.)
இதுவும் ஒரு கைவிளக்கை சிறு இருட்டறைவில் வைத்து மகிழும் ஒரு சிறு விளையாட்டு.
சிறு பயிற்சியின் மூலம் நீங்கள் வித்தைக் காட்டலாம்!
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான இடைவெளி இன்னும் குறையும்.
அவர்களின் உருவாக்கத் திறனும் அதிகரிக்கும் !
இப்போதைக்கு,நம் மீது படையெடுத்துள்ள அயல்நாட்டு நிறுவனங்களுக்கு நம் வேலை செய்யும் அறிவு மட்டுமே தேவை. நமது படைப்புத் திறன் மெதுவாய் அழிந்து கொண்டே வருகின்றது.
இது போன்றவை அவற்றை வளர்க்கும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை !
வாழ்த்துகள்!!













Posted by
RBGR
at
1:15:00 PM
0
comments
Labels: செய்தியும் படமும், புகைப்படம்/ஓவியம்
Thursday, March 29, 2007
நடிகர்திலகங்கள்!
O.T.I. செய்தி:
சென்று திரும்புகின்ற நமது விளம்பர நடிகத் திலகங்கள் புதிய படங்களில் ஒப்பந்தமானார்கள்.
அவர்கள் நடிப்புத் திறன் பற்றி தயாரிப்பாளர் அஸ்கிபுஸ்கி கூறுகையில்,
"அவர்களின் விளம்பரப் படங்களினைப் பார்த்துள்ள நான் ஏற்கனவே ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன்.( அப்போது எடுத்த மேக்கப் டெஸ்ட் தான் கீழ்க் கண்ட LA..AGAIN புகைப்படம்.)
"ஆனால், உலகப்போட்டிகளில் அவர்களின் நடிப்பு என்னை உருக்கி விட்டது. மிகச்சுலபமான பந்தாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அவுட்டான விதமும் ( இந்த இடத்தில் அஸ்கி கண்ணீர் விட்டு அழுதார்), மேலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அடிக்காமல் விட்ட அவ்வீரமிகு மைந்தர்களின் நடிப்புத் திறன் உலக சினிமா வரலாற்றில் பதிக்க வேண்டிய ஒன்று " என்று கூறினார்.
அப்போது அவர் வெளியிட்ட சில படங்களின் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு!!




மேலும், அமெரிக்காவில் இருந்து ஸரோஜ் நாயுடு சாமி அனுப்பிய ஒரு செய்தி:
புதிய நடிகர்களினைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரியண்ணணும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமா(க்)கியுள்ளாராம்.
அவசரச் செய்தி:
அதிரடி நாயகர்கள் இணந்து மிரட்டும் ஒரு சரித்திரபடமும் ஒப்பந்தமாகியுள்ளதாக ஏஜென்சி செய்திகள் சொல்லுகின்றன.
இனி இன்றைய கிசு கிசு:
கொதிப்படைந்த லொல்லு அவர்கள் நான் அவர்களை விட நன்றாக நடிப்பேன் என்று மேக்கப் போட்டுக்கொண்டதாக சில புகைப்படங்களை இன்று ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.


Posted by
RBGR
at
10:53:00 AM
2
comments
Labels: புகைப்படம்/ஓவியம்
Monday, March 26, 2007
விளையாட்டாப் போச்சு!!
செய்தி:
நான் விளையாடப் போயிருந்தாலே இந்தியா கோப்பையைக் கைப்பற்றியிருக்கும். - லல்லு பிரசாத் யாதவ்.
நம்ம மூத்த பெரியண்ணன் ஜார்ஜ் புஸ் கடுப்பாகி உடனே பாக்- டீமுடன் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
பேசாமல் இவங்களை அனுப்பியிருந்தால் கூட கெலிச்சிருக்குமோ என்னவோ!?


Posted by
RBGR
at
11:49:00 AM
3
comments
Labels: புகைப்படம்/ஓவியம்
Friday, March 23, 2007
கனவில் சென்னை!
கூவம் சுத்தப்படுத்தப்பட்டு உள் நாட்டுப்போக்குவரத்து துவங்கியது.
சாலைகளினோரம் சோலைகள்....
ஒரு மெட்ரோ ரயில்...
ஒரு படகும் பின்னே மேம்பாலமும்...
Posted by
RBGR
at
4:41:00 PM
0
comments
Labels: புகைப்படம்/ஓவியம்
Tuesday, March 20, 2007
இசை விமர்ச்சனம்!
தம்பி பூனையார் அவர்களின் கருத்துக்களினைப் பாருங்களேன்!
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பற்றி:
புதுமை இசையமப்பாளார் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பற்றி:
தேனிசைத் தென்றல் தேவா இசைப் பற்றி:
அருமை வாரிசு யுவனின் இசைப் பற்றி:
இது இசை ஞானியின் இசை பற்றி :
இது இவ்வளவு இசைச் சங்கமம் கேட்டவுடன் நடந்த நிகழ்வு:
Posted by
RBGR
at
1:19:00 PM
10
comments
Labels: புகைப்படம்/ஓவியம்










